
கவிஞர் வைரமுத்து தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?- என்று கேள்வியெழுப்பியுள்ளார். அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததோடு மட்டுமல்லாமல், ஐ.நா சபையின் அலுவல மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் […]
Continue reading …
தென்னக ரயில்வே கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் […]
Continue reading …
டிடிவி தினகரன், “கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். திமுக பொதுக்குழுவில் சமீபத்தில் கூடியது. அதில் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கனிமொழி மீதான பயம் காரணத்தினால் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அவருக்கு பதவி கொடுக்காவிட்டால் திமுக இரண்டாகி இருக்கும். தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை […]
Continue reading …
சமீபத்தில் எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில் ஒரு தம்பதியர் சென்ற வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நேற்று ஒரு தம்பதியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று வாகனத்தில் தீ பற்றுவது போன்று உணர்ந்த அப்பெண் தன் கணவரிடன் கூறவே, அவரும் சுதாரித்துக் கொண்டு, வாகனத்தை சாலையில் ஓரங்கட்டி வானத்தைவிட்டு கீழிறங்கினார். அப்போது, வண்டியின் அடிப்பாகத்தில் குபுகுபுவென தீப்பற்றியது. அதைப் பார்த்து தம்பதியர் அதிர்ச்சியடைந்தனர். அருகில் […]
Continue reading …
“பிரின்ஸ்” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவை தொடர்ந்து இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் “பிரின்ஸ்.” இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிவகார்த்தியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,இப்படத்தின் டிரெயிலரை பார்த்த நடிகர் […]
Continue reading …
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான் என்று கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மட்டும்தான் தாய்மொழியில் படிக்காத மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையின் முதல் அடிப்படையே தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதனை ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அலுவல் மொழி இந்தி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த விஷயமே தவிர அது பாஜக கொண்டு வந்தது அல்ல. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து […]
Continue reading …
ஆங் சான் சூகியின் சிறை தண்டனை மேலும் 26 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. 77 வயது ஆங் சான் சூகி மியான்மரின் நடந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியதற்காக தற்போது சிறையில் உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆன் சாங் சூகி […]
Continue reading …
“பதான்” திரைப்படத்தின் டீசர் “கேஜிஎப்”, “ஆர்ஆர்ஆர்” ஆகிய திரைப்படங்களையே மிஞ்சும் அளவிற்கு உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய திரைப்படம் “பதான்.” இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சமீபத்தில் “பதான்” திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. யஷ்ராஜ் பிலிம்ஸின் 50வது ஆண்டை (தொடக்கம் 1970) விழாவை சிறப்பிக்கும் வகையில், […]
Continue reading …
பட்டாசு விற்பனை சங்கம் முதன்முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசுகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரியான விலையில் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் முதல் முறையாக அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் பட்டாசு விற்பனை செய்ய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. சென்னை தீவுத்திடலில் 114 பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் கடைகளை அமைக்க இருப்பதாகவும் அனைத்து கடைகளிலும் கூட்டுறவு […]
Continue reading …
உலகநாயகன் கமலஹாசனின் “சபாஷ் நாயுடு” தி¬ப்படத்தைத் தொடங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘சபாஷ் நாயுடு’ திரைப்படம் லைகா தயாரிப்பில் கமலஹாசன் எழுதி இயக்குவதாக தொடங்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. அமெரிக்காவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமலுக்கு அப்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மீண்டும் தொடங்கப்படாமலேயே கிடப்பில் இருந்தது. படத்தைப் பற்றி அனைவரும் மறந்து போன நிலையில் தற்போது மீண்டும் இப்படம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக லைகா மற்றும் கமலஹாசன் ஆகிய […]
Continue reading …