
தமிழக ஆளுனர் ரம்மி உட்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். சமீபகாலமாக தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உட்பட்ட விளையாட்டுகளினால் பலர் பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் தங்களின் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் நிலை தொடர்ந்துள்ளது. இந்த ஆன்லைன் ரம்மி உட்பட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சமீபத்தில், இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவதற்காக சென்னை உயர் […]
Continue reading …
கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இன்றும் மனிதர்கள் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதை விடவில்லை என்று சில சம்பவங்கள் மூலம் தெரிகிறது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் என்ற மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் என்ற கிராமத்தில் ஒரு கோயிலில் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுகுறித்து, வீடியோ […]
Continue reading …
நடிகர் கமல்ஹாசன் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை என்றும் அது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்ததிலிருந்து ராஜராஜன் சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்ற பேச்சு பல தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் இது குறித்த கருத்து தெரிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையிலிருந்து இந்து மதம் என்ற பெயர் ராஜராஜன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம் ஆகிய மதங்கள் […]
Continue reading …
பாஜக பிரமுகர் எச் ராஜா முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார். திருமாவளவன், சீமான் ஆகிய இருவரும் தேச துரோகிகள். ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஸ்டாலின் நல்லவர் என்றாலும் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள். எனவே நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று […]
Continue reading …
இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மன விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் இயற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே […]
Continue reading …
அமீர்கானின் நடிப்பில் உருவான “லால் சிங் சத்தா” திரைப்படம் ஓடிடியில் ரிலீசாவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இப்படத்தினை 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் […]
Continue reading …
அன்புமணி ராமதாஸ் அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனை- குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. வேலூர் மாவட்டம் காட்பாடிக்குட்பட்ட பொன்னிய அரசு ஆரம்பச் சுகாகாதார நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மா. சுப்பிரமணியன், மலைப்பகுதி என்பதால் அங்கு பாம்புக் கடிக்கான மருத்ததுகள் இல்லை; மருத்துவர்களும் பணியில் இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தததையடுத்து, பெண் மருத்துவர்கள் […]
Continue reading …
இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு ‘மணி’மகுடம் -என்று பாராட்டியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவாக இயக்கியிருந்தார். செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் “பொன்னியின் செல்வன் 1” […]
Continue reading …
டிடிவி தினகரன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். விவேகானந்தா சேவாலய விடுதி திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளின் விடுதியான இதில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன […]
Continue reading …