
11ம் வகுப்பு படிக்கும் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஆசிரியர் கொடுத்த பள்ளி பாடங்களை சரியாகப் படிக்கவில்லை என்பதால், அவரை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவி, தன் வீட்டிற்குப் பள்ளிக்குச் செல்வதுபோல் கிளம்பி பின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வந்து, துப்பட்டாவால் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார். 22 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்து விட்டு திடீரென ராகுல்காந்தி டில்லி சென்றதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, […]
Continue reading …
பாமக நிறுவனம் டாக்டர்.ராமதாஸ் பல மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியமில்லை என்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தமிழ்நாட்டில் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்ட 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஊதியச் சுமையை அரசே ஏற்றுக்கொள்ளும்; அவற்றுக்கு 2248 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது! அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும் அவற்றின் ஊழியர்களுக்கு பல்கலைகளே ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல […]
Continue reading …
இன்று கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பந்த் நடத்த அழைப்ப- விடுத்தது. இதற்கு தானாக முன்வந்து கேரள உயர் நீதிமன்றம் இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் திடீரென அதிரடி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு பின்னர் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அந்த அமைப்பு […]
Continue reading …
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பேருந்து மோதி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் விலங்குடி சத்யமூர்த்தி நகரில் வீட்டு வாசலில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அப்பகுதி வழியே தொழிலாளர்களை ஏற்றி வந்த மினி பஸ் சிறுவன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், வீட்டில் வாசலில் விளையாடிய செந்தில்குமாரரின் மகன் பொன்ராம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து […]
Continue reading …
போலீசார் ஹைதராபாத்தில் கிரிக்கெட் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்றது. இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் ஆஸ்திரேலிய அணி திறமையான பேட்டிங்கால் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது. 3வது டி-20 போட்டி வரும் 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் […]
Continue reading …
செப்டம்பர் 29ம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “நானே வருவேன்” திரைப்படம் ரிலீசாகிறது. செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் “நானே வருவேன்” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “வீரா சூரா” பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் […]
Continue reading …
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை சென்னையில் உள்ள மூன்று வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டிருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த மூன்று வழித்தடங்களில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை ஒரு வழித்தடமும், மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை […]
Continue reading …
மாற்றுத்திறனாளிகள் பேட்மின்டன் போட்டி தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் ஆசிய மற்றும் பசிபிக் என அனைத்துப் பிரிவுகளிலும் தமிழக மாணவி வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 6வது ஆசிய & பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “தாய்லாந்தில் […]
Continue reading …
கரூர் மாவட்டத்தில் குளங்களில் 2 தினங்களாக, ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் மணலை டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கடத்தி வருகின்றனர். வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பாஜக கட்சியினர் இடத்திற்கு சென்று முறையான அனுமதி ஏதும் உள்ளதா என்று விசாரித்த போது, எந்த பதிலும் இல்லை. இது பற்றி […]
Continue reading …