மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் தமிழக மாணவி சாதனை

Filed under: விளையாட்டு |

மாற்றுத்திறனாளிகள் பேட்மின்டன் போட்டி தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் ஆசிய மற்றும் பசிபிக் என அனைத்துப் பிரிவுகளிலும் தமிழக மாணவி வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 6வது ஆசிய & பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் பல்வேறு பிரிவுகளில் 6 தங்கங்களைக் குவித்து சாதனை புரிந்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேட்மிண்டனில் இன்னும் பல உயரங்களை அவர் எட்டிப்பிடித்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” என பாராட்டியுள்ளார்.