
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்- நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. நாளை தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் […]
Continue reading …
“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடிகர் தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படம் சம்மந்தமாக புதிய […]
Continue reading …
தமிழகத்தில் தீபாவளிக்கு முன்பே சட்டப்பேரவை கூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யும் மசோதா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அறிக்கை ஸ்மார்ட் கார்டு தொடர்பான அறிக்கை ஆகியவை […]
Continue reading …
கபடி விளையாட்டு வீராங்கணைகளுக்கு கழிவறையில் உணவு அளிக்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் ஷாகரன்பூரில் உள்ள அம்பேத்கார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வீராங்கணைகள் வந்திருந்துள்ளனர். அங்கு வீராங்கணைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. சிறுநீர் கழிக்கும் சிங்க் அருகே தட்டில் […]
Continue reading …
கர்நாடக மாநிலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள் இணைக்கப்படும் என்று கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை போதனைகள் இணைக்கப்படாது என்றும் அத்தகைய எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் அமைச்சர் நாகேஷ் கூறினார். ஆனால் தற்போது, “வரும் டிசம்பர் மாதம் முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அந்த பாடத்தில் பகவத் கீதை போதனைகள் உள்பட பல பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். […]
Continue reading …
இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்தனர். மேலும் படகில் இருந்த 8 […]
Continue reading …
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21ம் தேதி அதாவது நாளை கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் 28 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் தகுதியுள்ள நபர்கள் […]
Continue reading …
“வாத்தி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வாத்தி.” இப்படம் தமிழில் “வாத்தி”, மற்றும் தெலுங்கில் “சார்” ஆகிய பெயர்களில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருப்பது தெரியவருகிறது. மேலும் இப்படம் கல்வி துறையிலுள்ள ஊழல்கள், ஏழை மக்கள் நல்ல கல்வி கற்க முடியாத நிலை ஆகியவற்றை குறித்து அலசி ஆராயப்பட்டுள்ளதாக இருக்கும் என்பது படத்தின் டீசரிலிருந்து தெரியவருகிறது. படம் […]
Continue reading …
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காய்ச்சல் பரவி வருவதால் உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடுமென்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல! காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் […]
Continue reading …
மாணவிகள் குளிக்கும் வீடியோ விவகாரத்தால் சண்டிகரில் பல்கலைக்கழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் பல்கலைகழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலர் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் குளியலறையில் கேமரா வைத்து சக மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து அதை தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாணவி கைது செய்யப்பட்டார். பல்கலைகழகத்தில் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதற்கிஇடையே மாணவிகள் […]
Continue reading …