
நொய்டாவில் சமீபத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அக்கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் மற்றும் சிவன் கோயில் சிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான கோயில் கட்ட வேண்டும் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் பரிந்துரைள்ளதாக கூறப்படுகிறது. இப்பரிந்துரையின் அடிப்படையில் அந்த இடத்தில் விரைவில் கோயில் கட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Continue reading …
வாட்ஸ் அப் நிறுவனம் இனி ஒரு சில ஐபோன் மாடல்களில் வாட்ஸ் அப் சேவை கிடையாது என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல் ஸ்மார்ட் போன்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாட்ஸ் அப் சேவை கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல ஐபோன் 10 மற்றும் ஐபோன் 11 இயங்குதளங்களில் விளங்கும் ஐபோன்களில் அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் போன் பயன்படுத்துபவர்கள் […]
Continue reading …
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 வயது சிறுமி காதலிக்க மறுத்ததால் கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கவலை சென்னசமுத்திரம் மோட்டூரைச் சேர்ந்தவர் ராஜவேல் முருகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி (16)யை காதலித்துள்ளார். அச்சிறுமிடன் சென்று தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அச்சிறுமி அதற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த நபர் அச்சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார். அருகிலிருந்தோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, போலீசார் ராஜவேல்குமாரை தேடி […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி “தர்மம், நீதி வென்றது. உடனிருந்தே கொல்லும் வியாதி ஒழிந்தது” என்று அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், “உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நம்மையெல்லாம் வாழவைத்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து […]
Continue reading …
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் “பாஜகவுக்கு மாற்று நாங்கள்தான்” என்று கூறியுள்ளார். பாஜக கட்சி கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்தது. 2019ம் ஆண்டும் தொடர்ச்சியாக இரண்டாம் முறையும் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தெரிவிக்கின்றனர். ஆனாலும், நாட்டிலுள்ள பல மாநிலங்களில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கிறது. பாஜகவுக்கு அடிபணியாதவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை விட்டு […]
Continue reading …
திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று மதியம் 12.43 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் அருகே திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 108 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேத விவரம் எதுவும் இல்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் […]
Continue reading …
செப்டம்பர் 16ம் தேதி நாடெங்கும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த தினத்தில் மட்டும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சுமார் 4000 ஸ்க்ரீன்களில் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 75 மட்டுமே வசூலிக்கப்பட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிவிஆர், ஐநாக்ஸ் உட்பட பல மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை […]
Continue reading …
போலீசார் கொடைரோடு அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட குட்கா பொருட்களை தனிப்படை மூலம் பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு வழியாக ஓசூரிலிருந்து காரில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின்படி போலீசார் அதிகாலை 3 மணி முதலே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு அருகே திண்டுக்கலிருந்து- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரிலிருந்து மதுரைக்கு கார் ஒன்று சென்றுள்ளது. அதனை நிறுத்தி போலீசார் […]
Continue reading …
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என பாண்டிச்சேரி சபாநாயகர் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திருப்பூர் மாநகர் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 5000 பேருக்கான அன்னதானத்தையும் தொடங்கி வைத்து பாண்டிச்சேரி சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்தவர், “இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான “சிவாஜி” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் இறந்ததாக சில சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த நடிகர் பதறிப்போய் உள்ளார். “சிவாஜி” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தவர் சுமன். இவர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார். முன்னணி நடிகர் பலருக்கும் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான “லெஜெண்ட்” திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த […]
Continue reading …