காதலிக்க மறுத்ததால் கழுத்து அறுப்பு!

Filed under: தமிழகம் |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 வயது சிறுமி காதலிக்க மறுத்ததால் கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கவலை சென்னசமுத்திரம் மோட்டூரைச் சேர்ந்தவர் ராஜவேல் முருகன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி (16)யை காதலித்துள்ளார். அச்சிறுமிடன் சென்று தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அச்சிறுமி அதற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த நபர் அச்சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினார். அருகிலிருந்தோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, போலீசார் ராஜவேல்குமாரை தேடி வந்த நிலையில், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.