
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு மழை பெய்ததை தொடர்ந்து இன்றும் மழை பொழியும் என தகவல் அளித்துள்ளது. நேற்றிரவு திடீரென சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்ததையடுத்து இன்றும் சென்னையில் இரவில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் நேற்று இரவு சென்னையில் திடீரென கனமழை பெய்தது. சென்னை மட்டுமின்றி அதன் […]
Continue reading …
தமிழகத்தின் தலைநகரான சென்னை உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு இன்று “சென்னை தினமாக” கொண்டாடப்படுகிறது. “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்ற கூற்றுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி என பல தேவைகளுக்கு சென்னை நோக்கி நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர். வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் சென்னை வந்து பிழைத்தோர் ஏராளம். தன்னை நம்பி வருவோரை கை விடாமல் ஏதோ ஒரு வகையில் உதவிக் […]
Continue reading …
தொடர்ந்து விஷ ஊசி செலுத்தி பிறந்த குழந்தைகளை செவிலியர் ஒருவர் கொன்றது அர்ஜெண்டினாவில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகப்பேறு மருத்துவமனை அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கார்டோபோ நகரில் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்கள் ஆரோக்கியமாக இருந்த குழந்தை பின்னர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது. குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் குழந்தை […]
Continue reading …
ஈரோடு மாவட்டத்தின் அருகே உள்ள வாய்க்காலில் சிறுவனின் உடல் சடலமாக மிதந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள உக்கரம் குப்பன்துறை என்ற பகுதியில் கீழ்பவானில் வாய்க்காலில் ஒரு சிறுவன் உடல் மிதந்து வருவதை அங்குள்ள மக்கள் பார்த்தனர்.இதுகுறித்து கடத்தூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு முதலுதவி செய்ய […]
Continue reading …
மதுரையில் உள்ள பிரபல ஓட்டலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் அருகே புதூர் பேருந்து பேருந்தில் பகுதியில் உள்ள 4 மாடி கொண்ட ஒரு ஹோட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை ஓட்டலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]
Continue reading …
மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மேசெஜால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தொடர் தாக்குதல் நடந்தது போல் மீண்டும் ஒரு தொடர் தாக்குதல் நடைபெறும் என மெசேஜ் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பல இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. தாஜ் ஹோட்டல் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 175 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் […]
Continue reading …
சென்னை ஐஐடி மாணவி தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் தலை, முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மர்மமான முறையில் சடலமானகக் கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணையில், உயிரிழந்த பெண் ஒடிஷா […]
Continue reading …
அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும் என்று கூறியுள்ளார். புதிதாக சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “2028ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் […]
Continue reading …
தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் எதிர்பாராத வெற்றியால் தனுஷ் மகிழ்ச்சியாக இருந்தாலும், ரிலீஸுக்கு முன்னர் படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாராமுகம் காட்டிய தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தியில் […]
Continue reading …