
குஜராத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடித்த ‘தியா அவுர் பார்த்தி ஹம்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது, இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வெளியான சீரியல் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட “கணவன் என் தோழன்” என்ற பெயரில் வெளியானது. இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக […]
Continue reading …
நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய “கோப்ரா” திரைப்படத்தின் தயாரிப்பாளர் படத்தின் நீளத்தை குறைக்க சொல்லி கேட்டுள்ளதாகவும், அதற்கு இயக்குனர் சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. “கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் […]
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை இனிமேல் பள்ளியை மாணவர்களை வைத்து தூய்மை படுத்தக்கூடாது -என அறிவித்துள்ளது. இன்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து உதிரும் இலைகளால் குப்பை உண்டாகிறது. மழைக்காலங்களில் இக்குப்பைகள் மழையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்பத்தும் வகையிலுள்ளது. அதனால், இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளி […]
Continue reading …
11ம் வகுப்பு மாணவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள பள்ளியில் விளையாட்டு பாட வேலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கஜினி என்ற மாணவர் பந்து வீசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் வந்து தங்கள் மகனின் உடலை பார்த்து […]
Continue reading …
கோவையில் திருடன் ஒருவன் தான் திருடிய பைக் ஓனரிடமே பைக்குடன் வந்து டைம் கேட்டுள்ளார். பல பகுதிகளிலும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறும் நிலையில் சில சந்தர்ப்பங்களில் திருடர்கள் அஜாக்கிரதையாக மாட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. கோவை மாவட்டம் சூலூரில் முருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். காலையில் பார்த்தபோது அந்த இடத்தில் இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உடனடியாக புகார் அளிக்க காவல் நிலையம் […]
Continue reading …
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இனி எலி பேஸ்ட், சாண பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எலி […]
Continue reading …
10 புதிய பொருட்களை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது மேலும் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு பொதுத்துறையின் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழகம் முழுவதும் பால் சொசைட்டி, ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்கிறது. விரைவில் தண்ணீர் பாட்டில்கள் விற்கவும் ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து […]
Continue reading …
ரிசர்வ் வங்கி இந்தியாவில் கூகுள் பே உட்பட அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பலதரப்பட்ட உணவகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வணிக செயல்பாடுகளுக்கும் ஆன்லைனில் பணம் செலுத்தக்கூடிய கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் கூகிள் பே. போன் பே, பேடிஎம் உட்பட்ட பல ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக அன்றாடம் மக்கள் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். சிங்கிள் டீ குடிப்பது […]
Continue reading …
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது. ஆனால் இன்றும் நேற்றை போலே சற்று சரிந்துள்ளது. நேற்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை சரிந்து 60132 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 900 என்ற புள்ளிகள் வர்த்தகமானது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவில் இருந்தாலும் மிக குறைந்த அளவில் தான் சரிந்து இருப்பதால் […]
Continue reading …