ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கட்டணமா?

Filed under: இந்தியா |

ரிசர்வ் வங்கி இந்தியாவில் கூகுள் பே உட்பட அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பலதரப்பட்ட உணவகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வணிக செயல்பாடுகளுக்கும் ஆன்லைனில் பணம் செலுத்தக்கூடிய கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டன. இந்தியா முழுவதும் கூகிள் பே. போன் பே, பேடிஎம் உட்பட்ட பல ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக அன்றாடம் மக்கள் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். சிங்கிள் டீ குடிப்பது தொடங்கி பெரிய அளவிலான தொகையை அனுப்புவது இந்த செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் விதிக்கலாமா என்று ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.