
வானிலை ஆய்வு மையம் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல் நாளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 10ம் தேதி விருதுநகர் நெல்லை தென்காசி தேனி […]
Continue reading …
“ஜெர்ரி” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதீஸ். ஏ.எல்.விஜய்யின் “மதராசப்பட்டினம்,” “பைரவா” என பல படங்களில் நடித்துள்ளார். இவர் “நாய் சேகர்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ரசிகர்களிடம் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஹிரோவாக நடித்ததற்காக சதீஸுக்கு அறிமுக ஹீரோவுக்கான விருதை ஒரு தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விருதுடன் நடிகர் சதீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டு, “நாய் சேகர்” பட இயக்குனருக்கும், இப்படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து அரசியல் பற்றி பேசியதாக கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்தாண்டு வரை அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த நிலையில், உடல் நலக்குறைவை அடுத்து, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் தன் ரசிகர்கள் விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளில் சேரலாம் எனவும் தெரிவித்தார். சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக டில்லி […]
Continue reading …
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்” என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமிக்கு ரஜினி பாராட்டிய ஆடியோ வெளியான நிலையில், இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி […]
Continue reading …
மின்சார சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மக்களவையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், திமுக உட்பட அரசியல் கட்சிகள் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று […]
Continue reading …
விவசாயி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றியுள்ளார். குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் என்ற கிராமத்தில் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையை இரக்கமின்றி மண்ணில் புதைத்துள்ளார். அப்போது தற்செயலாக வந்த விவசாயி ஹிதேந்திர சிங், அக்குழந்தையை மீட்டு, அருகிலுள்ள ஹியத் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையைப் புதைத்த அப்பா அல்லது அம்மாவை போலீசார் தேடி வருகின்றனர். உள்ளூர் மக்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ள […]
Continue reading …
புதிய நீதிபதி அதிமுக பொதுக்குழுவின் வழக்கை விசாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீதிபதி கிருஷ்ணசாமி அவர்கள் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்த நிலையில் அவ்வழக்கில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. இவ்வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டுமென்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிபதி விலகி விட்டார். தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் […]
Continue reading …
7 நிறுவனங்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்காக முன்வந்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். தமிழக அரசு அனுமதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து ஆலை கடந்த சில ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் சமீபத்தில் முன்வந்தது. ஆலையை வாங்குவதற்கு ஜூலை 4ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் […]
Continue reading …
சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாணவி ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் அந்த உடலை 4 பேர் தூக்கி செல்லும் காட்சியின் […]
Continue reading …
8ம் வகுப்பு மாணவர் அவரது 12 வயதில் 3 செயலியை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திகேய ஜாகர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் மொபைல் வாங்கினார். அந்த மொபைல் மூலமே அவர் பல விஷயங்களை கற்றுக்கொண்டு செயலிகளை உருவாக்கினார். அவர் தற்போது மூன்று செயலிகளை உருவாக்கி உள்ளார். இதையடுத்து உலகின் மிக இளைய வயது ஆப் டெவலப்பர் என்ற பெருமை அவருக்கு […]
Continue reading …