
நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் 6 வில்லன்கள் அவருடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். “விக்ரம்“ படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் மற்றும் விஜய் இணையவுள்ள படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் […]
Continue reading …
இயக்குனர் மணிரத்னத்தின் “கடல்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவுதம் கார்த்திக். கவுதம் கார்த்திக் மணிரத்தினத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தாலும் வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் போனது. அவர் தற்போது ஒரு பிரபல நடிகையை காதலிப்பதாகவும், விரைவில் அவரை மணமுடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இவருவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு படம் ஒன்றில் நடித்தபோது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. நடிகர் கவுதம் கார்த்திக் தற்பொது சிம்புவோடு “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார்.
Continue reading …
சென்னை வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]
Continue reading …
கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். திடீரென அப்படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள தெலுங்கு படமொன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு […]
Continue reading …
கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். இது திரையுலகத்தினரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அன்புசெழியன் உள்ளிட்ட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியானது. இச்சோதனையில் குறித்து, வருமான வரிசோதனை வெளியிட்ட அறிக்கையில், வருமான வரிச்சோதனையில், […]
Continue reading …
டீக்கடைக்காரரின் மகள் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகிறார். டீக்கடைக்காரரின் மகள் பவானியா என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் குரூப் 1 தேர்வு எழுதினார். இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமலேயே தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக […]
Continue reading …
மதுரையில் மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் காமராஜர் சாலையிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது மருத்துவர் பரிந்துரை சீட்டில்லாமல் மாணவர்களுக்கு மாத்திரை வினியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருந்துக்கடை உரிமையாளர் தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு […]
Continue reading …
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிஎஸ்கே அணியில் முன்னாள் வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா என்பதும், அவர் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவம் செய்துள்ளது. […]
Continue reading …
ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடன் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஓபிஎஸ் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமை நீதிபதிக்கும் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறுங்கள் என நீதிபதி கிருஷ்ணன் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்த இதையடுத்து ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு அந்த மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் […]
Continue reading …
ஹிப் ஆப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படத்தில் அறிமுகமானவர் ஆத்மிகா. இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து வைரலாகி உள்ளது. ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படம் அவருக்கு போதுமான அளவுக்கு கவனம் பெற்றுத் தரவில்லை. அடுத்தடுத்து வாய்ப்புகள் பெரியளவில் அமையவில்லை. தற்போது “காட்டேரி” படத்தில் நடித்துள்ளார். அப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சமீபத்தில் அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அப்பதிவில், “அதிர்ஷ்டசாலிகள் எளிதாக ஏணியில் ஏறி மேலே சென்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் பாத்துக்கொள்ளலாம்” என […]
Continue reading …