
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் சென்னையில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிரதான போக்குவரத்து சாலையில் போக்குவரத்து நெரிசலில் பயணித்த கார் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது. கார் திடீரென தீப்பற்றியதை கண்ட பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில நிமிடங்களில் கார் முன்பக்கம் முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் […]
Continue reading …
12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது மற்றொரு 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் இன்று 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அப்பள்ளிக்கு உடனடியாக கல்வி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைந்து சென்று மாணவி தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வத்தை “ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார்” என கிண்டலடித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுகவினர் யாரும் இல்லை. ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ பன்னீர்செல்வம் ஆட்களை நியமித்து வருகிறார்” அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “திமுக அரசு ஆட்சிப் […]
Continue reading …
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’ ஓடிடியில் நேரடியாக வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடைசியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படம் “நாச்சியார்.” பின்னர் இயக்கிய “வர்மா” திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்து அந்த படத்தை […]
Continue reading …
பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சமீபத்தில் கலந்து கொண்டார். நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் விவாகரத்து செய்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் ரிலீசானது. அடுத்து “குஷி,” “யசோதா” மற்றும் “சகுந்தலம்” ஆகிய படங்கள் கைவசம் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அவ்வப்போது விவாகரத்து குறித்த கேள்விகளை இருவருமே எதிர்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் பிரபல […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருதுகளை பெற்ற கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளில் சூர்யா தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்த “சூரரைப் போற்று” படம் 5 விருதுகளையும், இயக்குனர் வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” படம் 3 விருதுகளையும், யோகிபாபு நடித்த “மண்டேலா” படம் 2 விருதுகளையும் வென்றது. தமிழ் சினிமா 10 விருதுகளை வென்று பெருமைப்பட […]
Continue reading …
முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர். கமல்ஹாசன்- அர்ஜூன் இணைந்து நடித்த “குருதிப் புனல்,” நடிகர் விக்ரம் நடித்த “மீரா,” “வானம் வசப்படும்க” ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், முதல் இரு படங்கள் வெற்றியடைந்து, “வானம் வசப்படும்” தோற்றது. பல முன்னணி இயக்குனர்களிடன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர், படங்களை இயக்கவில்லை. இதுபற்றி அவர், “இயக்குனர் ஆகவேண்டுமென்று சில படங்களை இயக்கினேன். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. அதனால், […]
Continue reading …
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர். போலீசார் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரியோவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரெசில் நாடான ரிலோ டி ஜெனிரியோவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கடத்தல் கும்பல் பதுங்கியிருந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கடத்தல்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
Continue reading …
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவர் மட்டுமே தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் மட்டுமே உள்ளனர்.இருவரில் ஒருவர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து கணிப்பு நேற்று வெளியானது. கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கை […]
Continue reading …
இயக்குநர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப் 2 திரைப்படம் 100வது நாளை கொண்டாடும் விதமாக இப்படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான கேஜிஎப் 1 திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எப் 2 ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸானது. படம் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த […]
Continue reading …