Home » Entries posted by Shankar U (Page 518)
Entries posted by Shankar

அமைச்சர்களுக்கு சம்பளமில்லை!

Comments Off on அமைச்சர்களுக்கு சம்பளமில்லை!
அமைச்சர்களுக்கு சம்பளமில்லை!

அமைச்சர்களுக்கு இனி சம்பளமில்லை என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார திண்டாட்டத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். புதிதாக பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றதும் செலவினங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு ஆண்டிற்கு ஊதியமில்லாமல் பணிபுரிய அமைச்சர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து இலங்கையில் இனிமேல் அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை என்பது உறுதி […]

Continue reading …

விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்!

Comments Off on விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்!

மதுரை ஆதீனம் நடிகர் விஜய் நடித்த படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மதுரை ஆதினம் “நடிகர் விஜய் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதால் அவரது படங்களை பார்க்காதீர்கள், கடவுளை இழிவு படுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என்று சொல்கிறார்கள், சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்கு தூக்கும்போது […]

Continue reading …

நயன்தாரா – விக்னேஷ் திருமணம் ஓடிடியிலா…?

Comments Off on நயன்தாரா – விக்னேஷ் திருமணம் ஓடிடியிலா…?

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவொரையொருவர் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த ஜோடிகள். நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இணையதளம் ஒன்று நயன்தாரா திருமண அழைப்பிதழ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதாக அறிவுக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த […]

Continue reading …

கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினி மீண்டும் கூட்டணி!?

Comments Off on கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினி மீண்டும் கூட்டணி!?

சூப்பர் ஸ்டார் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் திரைக்கதை பற்றிய விவாதக் குழுவை சேர்ந்தவர்கள் இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். “பீஸ்ட்” படத்தின் ரிலீசுக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். அதையடுத்து தற்போது படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குனர் நெல்சன் […]

Continue reading …

உத்தரகாண்டில் சோகம்!

Comments Off on உத்தரகாண்டில் சோகம்!

பக்தி யாத்திரைக்கான பயணத்தில் பேருந்து கட்டுப்பாடிழந்ததால் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து பேருந்தில் சர்தாம் புனித யாத்திரை பயணமாகி உள்ளனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேரில் 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 […]

Continue reading …

பாஜகவினருக்கு ஜெயக்குமார் அறிவுரை!

Comments Off on பாஜகவினருக்கு ஜெயக்குமார் அறிவுரை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு அறிவுரையாக கூறியுள்ள பதில்கள் வைரலாகி உள்ளது. சமீபகாலமாக சசிகலா தன்னை அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறி வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதாக பேசி வருவது அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. கட்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரை […]

Continue reading …

ஆன்லைன் சூதாட்டத்தில் ஐடி ஊழியர் தற்கொலை!

Comments Off on ஆன்லைன் சூதாட்டத்தில் ஐடி ஊழியர் தற்கொலை!
ஆன்லைன் சூதாட்டத்தில் ஐடி ஊழியர் தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் விறையாடி ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் ஐ.டியில் பணிபுரியும் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். வேலைக்கு செல்லும் போது பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மேல் இருந்த மோகத்தினால் அவருடைய 20 சவரன் தங்க நகையை சகோதரியிடம் கொடுத்து ரூ.30 லட்சம் கடன் […]

Continue reading …

ஆயுள் தண்டனையை நிறுத்த முடியாது!

Comments Off on ஆயுள் தண்டனையை நிறுத்த முடியாது!

மதுரை நீதிமன்றம் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு கொடுக்கப்படும் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். ஆத்திரமடைந்த சிலர் அவரை வெட்டி கொன்றனர். மாணவர் கோகுல் ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கையப்படுத்தி விசாரித்தனர். 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து மதுரை மத்திய […]

Continue reading …

லோகேஷூக்கு உலகநாயகன் அறிவுரை!

Comments Off on லோகேஷூக்கு உலகநாயகன் அறிவுரை!

உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷூக்கு “ரசிகர்களின் அன்புக்கு பதில் இதை செய்யுங்கள்” என அறிவுரை கூறியுள்ளார். தற்போது மக்களிடையே ஹாட் டாப்பிக்காக பேசப்படும் திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படம் “விக்ரம்.” முதல்நாளிலேயே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு […]

Continue reading …

இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

Comments Off on இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

முத்தமிழ் பேரவையின் 41ம் ஆண்டு இசைவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு கலந்து கொள்ளும் முதல் இசை விழா நிகழ்ச்சி இது. விழாவில் பல்வேறு தரப்பு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஆலோசனையின் படி உருவாக்கப்பட்டதுதான் இந்த முத்தமிழ் பேரவை அமைப்பு. பல்வேறு சங்கடங்களுக்கு இடையில் முத்தமிழ் பேரவை நல்லவிதமாக அமிர்தம் அவர்களால் செயல்பட்டு வருகிறது. மக்கள் எல்லோருடைய தோளோடு தோளாகவே […]

Continue reading …