Home » Entries posted by Shankar U (Page 53)
Entries posted by Shankar

தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி!

Comments Off on தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தாய் இறந்தது தெரியாமல் பட்டினி கிடந்து பலியாகினார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திலுள்ள தாசனஹடியைச் சேர்ந்த 62 வயதான ஜெயந்தி ஷெட்டி. இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தனது மனநலம் பாதிக்கப்பட்ட 32 வயது மகள் பிரகதியுடன் ஜெயந்தி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் சர்க்கரை வியாதி காரணமாக ஜெயந்தியின் ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது. அதன்பின்னரும் அவர் தன்னையும் பார்த்துக் கொண்டு தனது மனநலம் குன்றிய மகளையும் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். […]

Continue reading …

தக் லைஃப் படத்தின் அப்டேட்!

Comments Off on தக் லைஃப் படத்தின் அப்டேட்!

‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது டில்லியில் நடந்து வருகிறது. கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் இப்பத்தில் நடித்து வருகிறார்கள். படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் டில்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து […]

Continue reading …

அதிசய விண்கல்லால் வாய்பிளந்த ஸ்பெயின் மக்கள்!

Comments Off on அதிசய விண்கல்லால் வாய்பிளந்த ஸ்பெயின் மக்கள்!

விண்கள் ஒன்று ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்றதால் வானம் அதிபிரகாசமானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் பூமிக்கு வெளியே விண்வெளியில் உள்ளன. பிரபஞ்சம் முழுவதுமே சிறியது முதல் எவரெஸ்ட்டை விட பெரிய சைஸிலான விண்கற்கள் கூட சர்வசாதரணமாக சுற்றி வருகின்றனர். சூரிய குடும்பத்தை தாண்டி சென்றால் உள்ள இண்டெஸ்டெல்லார் பெல்ட் என்பது இப்படியான விண்கற்களால் உருவான ஒரு மாபெரும் வளையம்தான். பூமியை நாள்தோறு […]

Continue reading …

நடிகர் அக்சய்குமாரின் முதல் வாக்குப்பதிவு!

Comments Off on நடிகர் அக்சய்குமாரின் முதல் வாக்குப்பதிவு!

இன்று முதல் முதலாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் கனடா குடியுரிமை வைத்திருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது. கனடா குடியுரிமையை திரும்ப கொடுத்துவிட்டு அவர் இந்திய குடியுரிமை கேட்டு பெற்றார். இந்திய குடியுரிமை பெற்றபின் அவர் முதல் முதலாக இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம், “இந்தியா வளர்ச்சி […]

Continue reading …

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு? வானிலை மையம் தகவல்!

Comments Off on வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு? வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம், “மே 22ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவையிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு […]

Continue reading …

மாடுகளுக்கும் லைசென்ஸ் வேண்டுமா?

Comments Off on மாடுகளுக்கும் லைசென்ஸ் வேண்டுமா?

மாநகராட்சியிடம் நாய் வளர்ப்பவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. நாய் பொதுமக்களை கடித்தால் நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாய்கள் மட்டுமின்றி மாடுகள் முட்டியும் பலர் காயமடைவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மாடுகள் வளர்க்கவும் லைசன்ஸ் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி விரைவில் உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது. மாடுகள் வளர்ப்பவர்கள் அதை சாலைகளில் மேய விடுவதால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதியில் ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்வோர் […]

Continue reading …

அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!

Comments Off on அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!

இலங்கையில் அதானி நிறுவனம் மேற்கொண்டுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மன்னார், பூணெரின் ஆகிய இடங்களில் 484 மெகா வாட் காற்றாலை மின்நிலையங்களை உருவாக்கும் அதானியின் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்காக இலங்கை அரசு அதானி கிரீன் எனர்ஜி இடையே 20 ஆண்டுகால ஒப்பந்தம் கையெழுத்தானத்தை அடுத்து, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதானி நிறுவனம் […]

Continue reading …

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்!

Comments Off on இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்!

பெண் மருத்துவர் ஆந்திராவில் சிறுவனுக்கு திடீரென இதயம் என்ற நிலையில் அவரைப் முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார். ஆந்திராவில் விஜயவாடாவில் 6 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அந்த சிறுவன் தூக்கி எறியப்பட்டு பேச்சு மூச்சு இன்றி கீழே விழுந்துவிட்டார். சிறுவனின் தந்தை அலறி அடித்துக் கொண்டு தனது மகனை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார். அந்த வழியாக மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் ரவள்ளி சென்று கொண்டிருந்தபோது […]

Continue reading …

விஜய் மாநாடு குறித்து சீமான் பதில்!

Comments Off on விஜய் மாநாடு குறித்து சீமான் பதில்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளரிடம், “10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. விடுதலை புலிகள் அமைப்பு மீது ஏன் தடை விதிக்க வேண்டும்? தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும்? நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா? கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம் எனக் கூறி பாஜகவால் மக்களிடம் ஓட்டு கேட்க […]

Continue reading …