மன்னார்குடி ஜீயர் “எங்களை எதிர்த்தா சாலையில் நடமாட முடியாது” என்று அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி மே 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பட்டண பிரவேச […]
Continue reading …கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. இன்றிலிருந்து அக்னி நட்சத்திர காலம் தொடங்கி விட்டது. தொடங்கிய இன்றே பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு பல மாநிலங்களில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இதனால் வெயில் அதிக அளவில் வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே நடமாடுவதை மக்கள் குறைக்க வேண்டும் என வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அக்கினி வெயில் […]
Continue reading …ஷவர்மா என்ற உணவை சாப்பிட்ட பள்ளி மாணவி கேரள மாநிலம் காசர்கோட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் எனும் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி தேவநந்தா. உறவினர் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தேவநந்தாவும் அவருடன் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களும் சேர்ந்து கரிவலூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில […]
Continue reading …இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் இலங்கை மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு படகில் வர முயன்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் மற்றும் படகோட்டிகள் இருவர் உட்பட 14 பேரை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலையை சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் என 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவர் ஒரு பைபர் படகில் […]
Continue reading …டெல்லி அரசு ஏற்கனவே பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லை என்று அறிவித்திருந்தது. தற்போது கட்டுமான தொழிலாளர்களுக்கும் டிக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி தான். தற்போது மகளிர்களை அடுத்து டெல்லியில் உள்ள கட்டுமான தொழிலாளர்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் 10 லட்சம் […]
Continue reading …அடுத்த இரண்டு நாட்களில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து குளிர்காலமும் முடிந்து வெயில்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் அரிதாக கடந்த மார்ச் மாதம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி தமிழகம் நோக்கி வந்தது. இதனால் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்தது.
Continue reading …போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சென்னை பேருந்துகள் குறித்த முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காகவே “சென்னை பஸ்” என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வரும் பேருந்துகள் எப்போது வரும்? எப்போது செல்லும்? தற்போது எங்கு உள்ளது? எத்தனை நிமிடம் கழித்து வரும் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். […]
Continue reading …கொரடாச்சேரி, மே 3: திருவாரூரில், ஆயுள் தண்டனை குற்றவாளிகளை, சிறையில் அடைக்க திறம்பட செயல்பட்ட காவல் நிலைய தலைமை காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி அளித்து பாராட்டினார். கொரடாச்சேரி காவல் சரகம் இரட்டை கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நான்கு எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்க திறம்பட செயல்பட்ட கொரடாச்சேரி காவல் நிலைய தலைமை காவலர் திரு. ரமேஷ் என்பவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று (02.05.2022) […]
Continue reading …சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தை பற்றிய அதிரடி முடிவை எடுத்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்துவதற்கு தாமதமாகும் என்று செய்தி வெளியாகி உள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என தெரிகிறது. […]
Continue reading …நகைக்கடைகளில் இன்று அட்ஷய திருதியை என்பதால் மக்கள் பலர் நகை வாங்க வருவார்கள் என்ற காரணத்தினால் நகைக்கடைகளில் ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அட்ஷய திருதியை கொண்டாடப்படும் நிலையில் தங்கம் வாங்கினால் அது மேன்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று அட்ஷய திருதியையில் நகைவாங்க உகந்த நேரமாக காலை 5.49 முதல் மதியம் 12.13 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் நகை வாங்க அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என்பதால் நகைக்கடைகள் பல விடியற்காலை […]
Continue reading …