
பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல் பெங்களூர் அணியும் […]
Continue reading …
பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் குற்றங்கள் இல்லாத தமிழகம் உருவாக இது ஒன்றுதான் வழி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும். அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் […]
Continue reading …
மாடுகளை வளர்க்க லைசென்ஸ் கட்டாயம் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள் எருமை மாடுகள் வளர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் லைசென்ஸ் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாடுகள் நகர்ப்புறங்களில் வழிதவறி சுற்றித்திரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ராஜஸ்தான் […]
Continue reading …
கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்ணீர்புகை குண்டு, அதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளதாகவும் மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் […]
Continue reading …
சமீபத்தில் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரின் திரைப்படமான “லெஜெண்ட்” படத்தின் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடல் யூ டியூபில் மிகவும் பிரபலமானது என்பதும் நாடு முழுவதும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்கள் போன்று, ஒரு புதுமுக நடிகரின் பாடல் யூடியூப்பில் சாதனை பெற்றுள்ளது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த குஷியோடு படக்குழுவினர் அடுத்த […]
Continue reading …
வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஒருபக்கம். இன்று பங்கு சந்தையின் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ள நிலையில் இன்னொரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.76.26 ஆக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரூபாயின் […]
Continue reading …
அவ்வப்போது கூகுள் நிறுவனம் புதிய செயலிகளை அறிமுகம் செய்துவருகிறது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்ட் என்ற புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு டேட்டாக்களை எளிதில் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு முன் ஐபோனில் உள்ள டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனில் மாற்றுவதற்கு வசதி மிகவும் குறைவாக இருந்த நிலையில் […]
Continue reading …
இந்திய ராணுவத்தில் புதிய ராணுவ தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இருக்கும் தளபதி ஓய்வு பெற இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்திய ராணுவத்தின் தலைவராக இருப்பவர் நரவனே. இவர் ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால் இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மனோஜ் பாண்டே ஒரு பொறியாளர் என்றும், இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு பொறியாளர் […]
Continue reading …
இன்று காலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீச்சி அடைந்த நிலையில் இருந்தது. ஆனால் சற்று முன்னர் திடீரென உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நூத்தி 112.68 டாலராக உயர்ந்துள்ளது. இன்று காலை கச்சா எண்ணெய் இறங்குமுகமாக இருந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் நாளை இந்தியா உட்பட […]
Continue reading …
கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,53,290 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது […]
Continue reading …