சென்னை, செப் 24: சென்னையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல், 98.96 ரூபாய்க்கும், டீசல், 93.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலைகள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள், பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மக்களின் கவலையை போக்கும் விதமாக, தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால், சமீபத்தில் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் […]
Continue reading …லண்டன், செப் 24: ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகரான டேனியல் க்ரெய்க், இங்கிலாந்து கடற்படையில், கவுரவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட் திரையுலகத்தில், பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் டேனிடல் க்ரெய்க். கடந்த 2006ம் ஆண்டு முதல், இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் டேனியல் க்ரெய்க் இதுவரை கெசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் அளவுக்கு இவரின் நடிப்பு இருக்கும் என்பதால், இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் […]
Continue reading …வாஷிங்டன், செப் 24: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்துப் பேசினார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். பின் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை அவர் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், இருதரப்பு […]
Continue reading …புதுடெல்லி, செப் 24: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 31,542 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 31,542 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,542 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், […]
Continue reading …சென்னை, செப் 24: “தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, வரும் 26ம் தேதி, தமிழகம் முழுதும், மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது” என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தமிழகம் முழுதும் மாபெரும் தடுப்பூசி முகாம், 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக, 28 லட்சத்து, 91 […]
Continue reading …ஸ்ரீநகர், செப் 23: ஜம்மு – காஷ்மீரில் நேற்று சரணடைய மறுத்த பயங்கரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காஷ்வா கிராமத்தில், கிராம மக்கள் மீது பயங்கரவாதி அனாயத் அஷ்ரப் தார் என்பவர், தாக்குதல் நடத்தி வந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் சேர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் […]
Continue reading …சென்னை, செப் 23: அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இதில், போனி கபூர், யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்; யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் […]
Continue reading …சென்னை, செப் 23: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நேற்று நடந்த இந்த விழாவில், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்: திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. புதிய […]
Continue reading …சென்னை, செப் 23: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் […]
Continue reading …வாஷிங்டன், செப் 23: அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி, நேரத்தை வீணடிக்காமல், அரசு கோப்புகளை படித்துப் பார்த்து கையெழுத்திடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில், நம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, தலைநகர் டெல்லியில் இருந்து விவிஐபிக்களுக்கான ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம், நேற்று காலை புறப்பட்டார். விமானத்தில் பயணித்த பிரதமர், […]
Continue reading …