Home » Entries posted by Shankar U (Page 591)
Entries posted by Shankar

தொடர்ச்சியாக மூன்று தோல்வி இதுவே கோலிக்கு முதல்முறை!!

Comments Off on தொடர்ச்சியாக மூன்று தோல்வி இதுவே கோலிக்கு முதல்முறை!!

விராட் கோலியின் தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணி முதன்முறையாக 3 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்துள்ளது.ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்றது. இதில் 2-வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இது டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக 3-வது தோல்வி. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்திப்பது இதுவே முதன்முறை.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் […]

Continue reading …

வெயிட் எதுவும் முடிந்ததாக அர்த்தம் இல்லை சச்சின் ஓபன் டால்க்!!

Comments Off on வெயிட் எதுவும் முடிந்ததாக அர்த்தம் இல்லை சச்சின் ஓபன் டால்க்!!

போட்டி முடியும் வரை எதுவும் முடிந்ததாக அர்த்தமில்லை’ என்று அடிலெய்டு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான நாளாக இன்று அமைந்துவிட்டது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்திய அணி வெறும் 36 அணிக்கு ஆட்டமிழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையாக அமைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை அசத்தலாக விளையாடி […]

Continue reading …

திரௌபதி இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோயின் அறிவிக்கப்பட்டார்.

Comments Off on திரௌபதி இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோயின் அறிவிக்கப்பட்டார்.

திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகிய இந்த படத்திற்கு பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் மக்கள் ஆதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் […]

Continue reading …

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!!

Comments Off on கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!!

தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் இன்று (டிச.17) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 460 தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:“இந்தியாவிலேயே தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் […]

Continue reading …

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் புதிய அதிகாரி நியமனம்!!!

Comments Off on முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் புதிய அதிகாரி நியமனம்!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் பணி கடந்த 2 ஆண்டுகளாக நினைவிட கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நினைவிடத்தின் மையப்பகுதியில் பீனிக்ஸ் பறவை, இடது புறத்தில் அறிவு சார் பூங்கா, வலது புறத்தில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து நடைபாதை, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவமைப்பு பணி கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் […]

Continue reading …

இடியுடன் கூடிய கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!

Comments Off on இடியுடன் கூடிய கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மழைக்கு வாய்ப்பு:புரவி புயலுக்கு பின் தமிழகத்தில் பகல் நேரத்தில் ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு வேளைகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

Continue reading …

பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை காவல் ஆணையர் திறந்துவைத்தார்!

Comments Off on பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை காவல் ஆணையர் திறந்துவைத்தார்!

சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய காவல்நிலையத்தை சென்னை மாநகரா காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார். பெரும்பாக்கம், எழில்நகர், 8 மாடி அடுக்குக் குடியிருப்பு வளாகத்தில் இந்த புதிய காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாழ்த்தினார். காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். இப்புதிய காவல்நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சித் குமாரின் செல்லிடப்பேசி எண்களான 9840619597 […]

Continue reading …

சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!!

Comments Off on சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!!

சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!! சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 210 பேருக்கு கரோனா உறுதியானதாக சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது. ‘டிசம்பர் 16- ஆம் தேதி வரை சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 6,344 கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 210 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது; 3,773 பேருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இன்னும் 2,361 பேரின் பரிசோதனை முடிவுகள் […]

Continue reading …

அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

Comments Off on அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!! தமிழ்நாட்டில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியவற்றை தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்டுவரும் நிலையில், தொன்மையான தமிழ்மொழி அரசு […]

Continue reading …

விராட்கோலி அதிரடி அரைசதம் விளாசல்!!!

Comments Off on விராட்கோலி அதிரடி அரைசதம் விளாசல்!!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, அதிரடி அரைசதம் அடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மிக நீண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், 20 ஓவர் தொடரை இந்திய அணியும் வென்றது குறிப்பிடத்தக்கது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி […]

Continue reading …