பிரபல நடிகருக்கு வில்லனாக மாறும் ஜெய்!!! ஒரு சைடில் இருந்து பார்த்தால் தளபதி விஜய் போலவே இருக்கும் ஜெய், பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் ஜெய்யை தேடி வந்தனர். ஆனால் அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டாரா என்றால் கேள்விக்குறிதான். பத்தாததற்க்கு குடியும் கூத்துமாக […]
Continue reading …மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து விட்டது’ எனவும் மத்திய படைகளை உடனே மேற்கு வங்கத்திற்கு அனுப்புமாறு தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து விட்டதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னரே அங்கு மத்திய படைகளை அனுப்புமாறு மாநில பாஜக தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில்,காஷ்மீரை விடவும் மேற்கு வங்கத்தில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை […]
Continue reading …தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையாக விமர்சிப்பதை ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை. தமிழக முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதையும் மு.க ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் ஆதாயத்திற்கான தலைவர்கள் கடுமையான வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. கருத்து சுதந்திரம் என்று தலைவர்கள் தவறான வார்த்தைகளை பேசுவது […]
Continue reading …பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டமன்ற மேலவையில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவசரச் சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு தீர்மானித்துள்ளதாக தலவல்கள் வந்துள்ளது. இந்த மசோதாவானது கடந்த புதன்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மேலவையில், எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து அந்த சட்டத்தை தோற்கடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் மசோதாவை மேலவையில் நேற்று தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் தலைவரான பிரதாப்சந்திர ஷெட்டி, அவையை வியாழன் மாலையே ஒத்தி வைத்து அறிவித்தார். […]
Continue reading …அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழியாக அரையாண்டு தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடச்சூர், அயலூர், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் பணிகளைப் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளிகள் விரும்பினால் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வை இணையவழியில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். 50 விழுக்காடு பாடங்களைக் குறைப்பதுடன், எந்தெந்தப் […]
Continue reading …புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமாக இருந்த ஜான்குமார் எம்எல்ஏ, சாதகமற்ற சூழல் நிலவினால் காங்கிரஸிலிருந்து விலகுவேன் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இச்சூழலில் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் கோரியுள்ளார். திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த ஜான்குமார் பாஜகவுக்கு மாறப்போவதாகத் தகவல் வெளியானது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு ஜான்குமார் வென்றார். அப்போது, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். இதனால் அவர் போட்டியிட தனது பதவியை […]
Continue reading …மணப்பாறையில் அதிமுக மகளிர்குழு பூத் கமிட்டியை துவக்கி வைத்து, கையேட்டினை வெளியிட்டு ஆலோசனை வழங்கும் விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார். அந்த விழாவில் எல்.எல்.ஏ சந்திரசேகர், முன்னாள் எம்.பி.குமார், ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் வந்தாலே பொய்யான வாக்குறுதிகளை தருவது திமுகவின் வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள் […]
Continue reading …டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதற்கு தேவையான சில டிப்ஸ்களை முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் இந்திய வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும் கைப்பற்றியுள்ள நிலையில், இரு […]
Continue reading …கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங் புதன்கிழமை தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். காரணம் வேறொன்றுமில்லை. வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என கூறி வருகிறது. அது குறித்து தென்கொரொயா சந்தேகம் எழுப்பியுள்ளது. தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா சென்ற வார இறுதியில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலே இல்லை என்ற வட கொரியாவின் கூற்றை நம்புவது கடினம் என்று கூறினார். தொற்றுநோயை […]
Continue reading …மணப்பாறை தனியார் மருத்துவமனையில் திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்வதாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை நள்ளிரவில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் இவரது 35 வயது மகள். திருமணமாகாத இவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணுச்சாமி(எ)சூசை என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மணப்பாறை மதுரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு […]
Continue reading …