நடிகர் விஜய் பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சிக்கு, விஜயே முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த கட்சியில் எனது ரசிகர்கள் சேரக்கூடாது தடை போட்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் சொன்ன எஸ் .ஏ.சந்திரசேகர். அ.இ.த.வி.ம.இ என்ற கட்சியை தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகரை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர், அப்போது உங்கள் கட்சிக்கு விஜய் தடை போட்டுள்ளாரே என்பது பற்றி கேள்வி எழுப்பினர். விஜய் அப்படியா சொன்னார் என எதுவும் […]
Continue reading …இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் காணப்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்காக காணொளி வாயிலாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. அதே நேரம் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றில் 73.5 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. அடுத்ததாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38.4 சதவிகிதம் பேருக்கு மட்டுமே […]
Continue reading …ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா குணமடைந்த பிறகு களத்திற்கு திரும்ப வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே தான் காயத்தில் இருந்து குணமடைந்து நல்ல உடல்தகுதியை அடைந்துவிட்டதாக கூறிய ரோகித் சர்மா நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களம் இறங்கி விளையாடினார். […]
Continue reading …இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை படைத்துள்ளார். அமெரிக்க வரலாற்றில், அதிக மக்கள் வாக்குகளை பெற்ற முதல் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் சேர்ந்து 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்புக்கு 6.86 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அமெரிக்க […]
Continue reading …2014-ம் ஆண்டின் இந்திய தொலைகாட்சிகளின் தர முகமைகளுக்கான நடைமுறைகள்”ஐ ஆய்வு செய்ய பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி தலைமையில் நால்வர் கொண்ட குழுவை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்ச கம் அமைத்துள்ளது. இப்போது உள்ள நடைமுறைகள், தொலைகாட்சி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தொலைகாட்சி தர புள்ளிகளுக்கான குழு, நாடாளுமன்ற குழு ஆகியவற்றுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொண்டதன் அடிப்படையில் இந்திய தொலைகாட்சி தர முகமைகளுக்கான நடைமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டதாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில், அந்த நடைமுறைகளை மீண்டும் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பது அறியப்பட்டது. குறிப்பாக, இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் அண்மைகால பரிந்துரைகளான தொழில்நுட்ப முன்னேற்றங்கள்/தலையீடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கான முறை மற்றும் வெளிப்படையான, நம்பகத்தன்மையான தர முறைக்கான நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதைக் கருத்தில் கொண்டும் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.அதன்படி, இந்தியாவில் தொலைகாட்சி தர முறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது குறிப்பிட்ட காலத்துக்கு ஆய்வு செய்யும். ஏற்கனவே இருக்கும் முறை பற்றி இந்த குழு மதிப்பீடுகள் மேற்கொள்ளும். அவ்வப்போதைய சமயங்களில் அறிவிக்கப்படும் தொலைகாட்சி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள், ஒட்டு மொத்த தொலைகாட்சி தொழில்துறை செயல்கள் மற்றும் துறையின் பங்கெடுப்பாளர்களின் தேவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதுடன், வலுவான, வெளிப்படையான, பொறுப்புடமை கொண்ட தர முறையை செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். கீழ் குறிப்பிட்டபடி குழு அமைக்கப்பட்டுள்ளது.1) திரு.சஷி எஸ்.வெம்பதி, தலைமை நிர்வாக அதிகாரி, பிரசார் பாரதி –தலைவர்2) டாக்டர் திரு. ஷலப், புள்ளியியல் பேராசிரியர், கணிதம் மற்றும் புள்ளியியல் துறை, ஐஐடி, கான்பூர்-உறுப்பினர்3) டாக்டர் திரு. ராஜ்குமார் உபாத்யாய், செயல் இயக்குனர், சி-டாட்-உறுப்பினர்4) பேராசிரியர் திரு. புலக் கோஷ், பொதுக்கொள்கைக்கான தீர்வு அறிவியல் மையம்(சிபிபி) இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்
Continue reading …அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதுவரை முடிவுகள் தெரியாத நிலையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன இந்நிலையில், டெலாவேர் மாகாணத்தி ல் ஜனநாயக கட்சியை சேர்ந்த சாரா மெக்ப்ரைட் என்ற திருநங்கை செனட் உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார். இதன்படி டெலாவேர் செனட்டில் முதல் திருநங்கை உறுப்பினர் என்ற பெயர் சாரா மெக்ப்ரைடுக்கே. சாராவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஸ்டீவ் வாஷிங்டன் தோல்வியடைந்துள்ளார். டெலாவேரில் வடக்கு வில்மிங்டன் முதல் பென்சில்வேனியா எல்லை வரை முழுக்க முழுக்க ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான பகுதிகளாகும். […]
Continue reading …மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் அது பின்வருமாறு :-தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் தமிழகத்தில் உள்ளது. நிபுணர் குழு, மருத்துவக் குழு பரிந்துரை அடிப்படையிலேயே முடிவெடுக்கப் படுகிறது. பள்ளி திறப்பு தொடர்பான எதிர்க்கட்சி கருத்து பரீசிலிக்கப்படும். கழக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தான். எங்கள் பலம் அனைவருக்கும் தெரியும். கழகம் எக்கு கோட்டை, மோதுபவர்கள் மண்டை தான் உடைபடும். […]
Continue reading …தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அத்துடன் திரையரங்கில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு தியேட்டரில் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.வரும் 10-ந்தேதி தமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:- நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.திரையரங்கு வளாகத்திற்குள் எப்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட […]
Continue reading …ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பே இல்லை என்று ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளரை சந்தித்து பேசிய நரசிம்ம மூர்த்தி சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் உள்ளதா, அவர் எத்தனை நாட்கள் பரோல் மூலமாக வெளியே வந்தார் என்பது குறித்து தகவல் உரிமையறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், இதற்கு எதிராக சசிகலா வைத்த கோரிக்கையை நிராகரித்து சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளதாகவும் […]
Continue reading …ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்தார். ஆனால் உலகம் முழுவதும் நடைபெற்ற 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஐ.பி.எல். போட்டியிலும் முத்திரை பதித்த ஷேன் வாட்சன் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி முதன் முறையாக லீக் சுற்றுடன் […]
Continue reading …