Home » Entries posted by Shankar U (Page 70)
Entries posted by Shankar

நிர்மலாதேவி தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி!

Comments Off on நிர்மலாதேவி தீர்ப்பை தள்ளி வைத்த நீதிபதி!

இன்று நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்ற நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி மீது கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நிர்மலா தேவி […]

Continue reading …

ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது?

Comments Off on ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது?

மதுரையில் திடீரென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்று தனது ஆதரவாளர்கள் 200 பேருடன் திடீரென சாலை மறியல் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இடம் பேச்சுவார்த்தை […]

Continue reading …

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Comments Off on தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம், “இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்துள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக […]

Continue reading …

இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!

Comments Off on இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம் “வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் கேள்வி எழுப்பியுள்ளது. இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமையின்றி தனது பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி […]

Continue reading …

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை!

Comments Off on திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை!

ஸ்மோக் பிஸ்கட்டுகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் உள்ள ஸ்மோக் பிஸ்கட்டுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை செய்துள்ளது. திரவ நைட்ரஜனை உணவுப் பொருளில் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் திடீரென உடல்நல கோளாறால் கதறிய வீடியோ வைரலானதை அடுத்து […]

Continue reading …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை!

Comments Off on சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை!

26 வயது இளம்பெண் ஒருவர் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அப்பெண் யார் என்பதை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் நேற்று இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணத்தை கைப்பற்றி காவல் துறையினர் அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த பெண்ணின் கையில் செல்போன் […]

Continue reading …

துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்ட்!

Comments Off on துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்ட்!

மாவோயிஸ்ட் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் யாரும் வாக்களிக்க கூடாது என்று துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியிருப்பதாக கூறும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா என்ற பெண்ணை வேட்பாளராக்கி உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கிறது. ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவது இந்தியா கூட்டணியின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் […]

Continue reading …

திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

Comments Off on திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனர் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது. திருச்சியில் அரசு பேருந்தில் நடத்துனர் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென பேருந்து வளைவில் திரும்பியது. அப்போது நடத்துனர் இருக்கையின் போல்ட்டுகள் கழன்றதால் அவர் இருக்கையோடு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு நடத்துனரை சென்று பார்த்த போது அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாமல் நடத்துனரின் இருக்கை போல்ட்டுகள் துருப்பிடித்து இருந்ததால் அரசு […]

Continue reading …

மக்களே உஷார்! தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

Comments Off on மக்களே உஷார்! தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வருகிற 29ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 25.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழக கன்னியாகுமாரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். […]

Continue reading …

மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

Comments Off on மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பிரிவினை குறித்து பேசியதாக பாரதிய ஜனதாவும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளன. இப்புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகிய […]

Continue reading …