
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளர் கலாமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகளின் ஆட்சி வந்த பிறகு தான் சகித்து கொள்ள முடியாத […]
Continue reading …
விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று கோவை- மேட்டுபாளையத்தில், பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இப்பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஓட்டுக்கு திமுகவினர் கொடுக்கும் பணம் கஞ்சா மூலம் வந்த பணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இம்முறை திமுக காரர்கள் யாராவது தன்னுடைய […]
Continue reading …
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள் அவர்கள் வருவதால் என்ன பயன்? என்று தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அதிமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமியை ஆதரித்து, இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் […]
Continue reading …
இன்று சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் டில்லியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையிலடைத்தனர். இதுகுறித்த வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்று நீதிமன்றம் கூறியது. இவ்வழக்கில் ஏற்கனவே […]
Continue reading …
நேற்று திடீரென நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் சில நாடுகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில் நேற்றிரவு திடீரென ரிக்டர் அளவில் 4.8 என நியூயார்க் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியே ஓடி வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் ஏற்கனவே விண்ணை முட்டும் கட்டிடங்கள் பல […]
Continue reading …
மொசாம்பிக் நாடு உலகில் வறுமையில் வாடும் நாடு. இந்நாட்டில் எரிவாயு வளம் அதிகம் கொண்ட நாடாக உள்ளது. இருந்த போதிலும் இங்கு, 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் இருந்து மீள முயன்று கொண்டிருந்த மக்களுக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 5 ஆயிரம் […]
Continue reading …
ஓட்டு கேட்டு எந்தக் கட்சியினரும் கிராமத்திற்கு வர வேண்டாம் என்று திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே என்று மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தேர்தலின்போது மக்கள் வேட்பாளர்களிடமும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால், அது குறைகின்றபோதும், நிவர்த்தி செய்யப்படாதபோதும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குழிப்பட்டி மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. மலைவாழ் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ […]
Continue reading …
கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறையில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை பிடிபடாமல் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான காஞ்சிவாய், பேராவூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக தகவல் வெளியானது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். சிறுத்தையை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். சிறுத்தை தென்படுவதாக கூறிய […]
Continue reading …
இன்று தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன் பாஜகவில் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஆர்த்தி. இவர் தனுஷின் “படிக்காதவன்” உட்பட பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார். நடிகை ஆர்த்தி கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுகவிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகி இருந்தார். தற்போது திடீரென அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் […]
Continue reading …