
இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்கியதோடு மீன்பிடி வலைகளை அறுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் […]
Continue reading …
சமோசாவில் மாட்டுக்கறி கலந்து விற்பனை செய்த ஐந்து பேர் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் வதேரா பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் மாட்டு இறைச்சி சேர்ந்து விற்பனை செய்ததற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தயாரித்த சமோசா பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர் ஆய்வு முடிவில் சமோசாவில் மாட்டு இறைச்சி கலந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடமை உரிமையாளர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீசார் மேற்கொண்ட விசாரணையில் […]
Continue reading …
பறக்கும் படை அதிகாரிகளால் விருதுநகர் மாவட்டத்தில் கூரியர் வேன் ஒன்றில் 11 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் ஆணையம்தகுந்த ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே கூறியுள்ளது. அவ்வகையில் விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டிபட்டி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கூரியர் வேனை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர், […]
Continue reading …
தெற்கு ரயில்வே சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. கோடைக்கால விடுறையாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் வாரந்தோறும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் மாலை 6.45க்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30க்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு […]
Continue reading …
அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என பேசியுள்ளார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரித்து துரைமுருகன் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார், இன்று அவர் செய்தியாளர்களிடம், “நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார்கள், பிரதமர் தமிழகத்திற்கு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக […]
Continue reading …
டில்லி நீதிமன்றம் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் காவல் ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கவிதவை 10 நாட்கள் காவலில் […]
Continue reading …
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. மறைந்த ஆர்.எம். வீரப்பன் அரசியல் மட்டுமன்றி திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் திகழ்ந்தவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 98வது வயது பிறந்தநாளை ஆர்.எம்.வீரப்பன் கொண்டாடினார். தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
Continue reading …
திடீரென்று வருமான வரித்துறையினர் கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். புதன்கிழமை காலை 11 மணியளவில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை என்பதால் அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் […]
Continue reading …
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போடப்பட்ட சீல் அகற்றப்பட்டது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சோதனைக்கு பின்பு அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் […]
Continue reading …
வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியை தாக்கி, விமர்சித்து பிரசாரத்தில் பேசி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவுடன் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சமீபத்தில் வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கும்பகோணத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]
Continue reading …