
கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் “எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு தான் பிரச்சனை” என்று பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பாராளுமன்ற தொகுதி தொகுதியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் களம் இறங்கியுள்ளார். அவரது பிரச்சாரத்தில், “நான் ஏழு வயதில் பார்த்த கடலூர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எத்தனை தேர்தல் வந்தாலும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் இந்த பகுதி மாறவே இல்லை. வளர்ச்சி […]
Continue reading …
வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதுவையை சேர்த்து 10 தொகுதிகள் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதுவரை 9 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் அப்பகுதியில் […]
Continue reading …
பிவி ஷங்கர் இயக்கத்தில், ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார்- பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இவானா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. கிராமத்துக்கு அருகே இருக்கும் காடு ஒன்றில் யானை புகுந்து விட […]
Continue reading …
ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ரஷ்யாவில் நடந்த இசை கச்சேரியில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 60 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இத்தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ராக் இசை குழுவினர் நடத்திய இசை கச்சேரியில் திடீரென அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 60 பேர் பலியானதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் காயம் அடைந்தவர்களின் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]
Continue reading …
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதித்துள்ளதால், கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனின் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி 42 வயதான கேட் மிடில்டன் இளவரசி. கடந்த ஜனவரியில் கேட் மிடில்டனுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில், “எனக்கு கீமோதெரபி […]
Continue reading …
அமலாக்கத்துறை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து விவரங்களை தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விராலிமலை எம்.எல்.ஏ ஆவாக இருக்கும் சி.விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விஜயபாஸ்கர் […]
Continue reading …
நேற்று முன்தினம் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வருகிற 25-ம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. டில்லி அரசின் 2021- 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் ஊழல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை கைது செய்தனர். இம்முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு […]
Continue reading …
அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டதாகவும், கொளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அப்பணத்தில்தான் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தபப்ட்டது என குற்றம் சாட்டிருந்தது. இவ்வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர். அவருக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்த நிலையில், “நேரில் […]
Continue reading …