கம்பம் வாரச் சந்தைக் கடைகள் ஏலம்: நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் தீா்மானம். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி வாரச் சந்தைக் கடைகள் ஏலம் விடப்பட்டன. இதுதொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்பம் நகராட்சியில் வாரச்சந்தை, தினசரி சந்தை, நுழைவு வாயிலில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் வைப்புத் தொகையை நிா்ணயித்து ஏலம் விடப்பட்டன. சுமாா் 14 முறை ஏலம் விடப்பட்டது. ஒரு சில கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், வாரச்சந்தை, தினசரி […]
Continue reading …*காஜாமலை விஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.* *மேயர் தன்னுடைய தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை அதற்காக தீ குளிக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு காஜாமலை விஜி ஒன்றும் நல்லவர் இல்லை – பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா பேட்டி* பாரதிய ஜனதா கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் குறைதீர்க்கும் முகாம் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா தலைமையில் திருச்சி […]
Continue reading …மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு. முதற்கட்ட தேர்தலில் விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 19 தமிழகத்தில் முதற்கட்ட ஒரே வாக்கு பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
Continue reading …திருச்சியில் பள்ளி மாணவி உள்பட 4 பேர் மாயம். போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் கலையான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் துர்கா தேவி(வயது 15) இவர் தில்லை நகரில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து சென்ற துர்கா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். […]
Continue reading …தி.மு.க. கூட்டணிக்கு பெண்கள் ஆதரவு தர வேண்டும்: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். திருச்சி விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு. அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஐம்பெரும் விழா திருச்சியில் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் நடந்தது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஸ்ரீதர் வரவேற்றார். விழாவை அமைச்சர் அன்பில் […]
Continue reading …சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கி 17 நாட்கள் திருவிழா நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு பால. பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி திருஏடு வாசிப்பினை தொடங்கி வைத்தார். பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி முன்னிலை வகித்தார் திருஏட்டினை ஜெயராஜா பழம், தங்கேஸ்வரி மற்றும் சரஸ்வதி […]
Continue reading …குமரி கல்குவாரியை மூட நீதிமன்ற உத்தரவு. குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் இயங்கி வரும் வி.கே.கல்குவாரி விதிகளை மீறி செயல்படுவதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி மார்ச் 4 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, நீதிபதி உத்தரவுபடி நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்க படாததால் வி.கே.கல்குவாரியை தற்காலிகமாக மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Continue reading …திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா. தங்களது ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவனிடம் அளித்தனர்
Continue reading …மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிப்பு. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட சு.வெங்கடேசனும் திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தனும் (மாவட்ட செயலாளர்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
Continue reading …நீலகிரியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ. மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் தேவைப்படும் பட்சத்தில் ஹெலிகாப்டர் பயண்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி நீலகிரிமாவட்ட வன அலுவலகர் கௌதம் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உடனிருந்தனர்
Continue reading …