Home » Entries posted by Ramesh M (Page 23)
Entries posted by Vaalmihi

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Comments Off on திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாவட்ட […]

Continue reading …

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

Comments Off on பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக புகார்.

Continue reading …

ஆதி நாராயணனை கொலை செய்ய முயற்சி.

Comments Off on ஆதி நாராயணனை கொலை செய்ய முயற்சி.

ஆதி நாராயணனை கொலை செய்ய முயற்சி. மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணனை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே அவரது கார் மீது மர்மநபர்கள் மற்றொரு காரை மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் தாக்கியுள்ளனர் அதிலிருந்து ஆதிநாராயணன் தப்பிய நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..

Continue reading …

வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள்.

Comments Off on வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் முன் நின்று புகைப்படங்கள் எடுத்து செல்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வைத்தார்.

Continue reading …

சங்கீத மகத்துவம் நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

Comments Off on சங்கீத மகத்துவம் நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

சங்கீத மகத்துவம் நிகழ்ச்சிஅரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு. ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் பாரதிய வித்யா பவன் திருச்சி கிளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில் சங்கீத மகத்துவ நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் 4-ம் நாள் நிகழ்ச்சியாக.கல்லூரி இசைத்துறை மாணவர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள் ராமபிரசாத் வயலின், சுவாமிநாதன் மிருதங்கம் வாசித்தனர். இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Continue reading …

துரை தயாநிதி உடல் நலக்குறைவு வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று அனுமதி.

Comments Off on துரை தயாநிதி உடல் நலக்குறைவு வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று அனுமதி.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Continue reading …

ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

Comments Off on ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை. ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் சோதனை. சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள். தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை

Continue reading …

திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல். புதிய நிர்வாகிகள் தேர்வு.

Comments Off on திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல். புதிய நிர்வாகிகள் தேர்வு.

திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல். புதிய நிர்வாகிகள் தேர்வு. திருச்சி நகர வழக்கறிஞர் சங்கத்தின் 2024 – 2025 நிர்வாகிகள் தேர்தல் சாஸ்திரி ரோட்டில் உள்ள ரெங்கா ஹாலில் நடைபெற்றது. தேர்தலை திருச்சி தாய் சங்கத்தின் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் , செயலாளர் கே. கண்ணன் ஆகியோர் நடத்தினர். முன்னாள் நகர வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஏ.புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தலைவராக என்.அன்பழகன், செயலாளராக ஜெ.தாஸ் பிரகாஷ்,துணைத் […]

Continue reading …

வாகன ஓட்டுநர் முருகன் உயிர் இழந்த விவகாரம். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவுக்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள்.

Comments Off on வாகன ஓட்டுநர் முருகன் உயிர் இழந்த விவகாரம். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவுக்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள்.

வாகன ஓட்டுநர் முருகன் உயிர் இழந்த விவகாரம். சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவுக்கு எதிராக பொங்கி எழுந்த மக்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சுற்றுலா வாகன ஓட்டுநர் முருகன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி 6வது நாளாக சங்கரன்கோவிலில் நடைபெறும் போராட்டத்தில் சமாதானம் பேச வந்த திமுக எம்எல்ஏ ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

Continue reading …

திருச்சியில் இன்று நடந்தது: காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம். திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.

Comments Off on திருச்சியில் இன்று நடந்தது: காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம். திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.

திருச்சியில் இன்று நடந்தது: காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம். திரளான நிர்வாகிகள் பங்கேற்பு. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி எஸ்.டி சார்பில் பிஜேபியை சேர்ந்த எம்.பி அனந்த் குமார் நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றவுடன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் எஸ்.சி, எஸ்.டி துறை மாநகர் மாவட்ட தலைவர் பிரேம்,தெற்கு மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் […]

Continue reading …