மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை கொச்சைப்படுத்தியதாக, நடிகைகுஷ்புவைக் கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம். உருவப்படத்தை எரித்து போராட்டம்- பரபரப்பு. பாஜக நிர்வாகி குஷ்புவைக் கண்டித்து திருச்சியில் திமுக மகளிர் அணியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் […]
Continue reading …திமுக தொகுதி பங்கிட்டு குழுவில் இடதுசாரிகளுக்கு சமூக நீதி வழங்கியதுபோல முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல். மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் சீட் வழங்கப்படாததால் திமுக கூட்டணிக்கு தேர்தல் பணியாற்றுவதை புறக்கணிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் […]
Continue reading …இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சியில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு, போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் […]
Continue reading …மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம். அரசியல் நாகரிகமற்ற விதத்தில் நம் தமிழ்நாட்டுப் பெண்களின் சுயமரியாதையை குலைக்கும் வகையில் ஊடகங்களிலும், பொதுவெளியிலும் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மகளிர் விரோத பாஜகவை கண்டித்து கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நடைபெற்றது..இதில் முன்னாள் அமைச்சர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி […]
Continue reading …பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் 1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள்துவக்கம் கோவை,ஈரோடு,நீலகிரி,திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்
Continue reading …குஷ்பூ, அண்ணாமலை உருவப்படம் கிழிப்பு. கன்னியாகுமரி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம். மகளிர் உரிமை தொகையை கொச்சைபடுத்தி பேசியதாக பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் பா.ஜ.மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை கண்டித்து கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்பு இருவரது உருவபடத்தை கிழித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Continue reading …ஹரியானா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது பாஜக அரசு. மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு. சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை பிடித்தது புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயாப் சிங் சைனி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.
Continue reading …திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் கொள்ளை அடித்த வழக்கில் 50 மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது. திண்டுக்கல் மாலப்பட்டி பிரிவு அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருப்பையா என்பவரின் வீட்டில் 80 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்து சென்றது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி உதயகுமார், ASP.சிபின் ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வாளர் சந்திரமோகன் […]
Continue reading …திருச்சி மகாலட்சுமி நகரில் நடந்த நிகழ்ச்சியில் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் இலட்சியத்தை அடைய பிரதமர் மோடிக்கு ஆலோசனைகளை பொதுமக்கள் தபால் பெட்டியில் கடிதமாக வழங்கிய போது எடுத்த படம். அருகில் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை செயலாளர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் உள்ளனர்.
Continue reading …சமயபுரம் அருகே லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருச்சி சமயபுரம் போலீசார் வாளாடி சிவன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த மனச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேலு அர்ஜுனன் ஆகிய மூன்று பேரை […]
Continue reading …