மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான  தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

Filed under: தமிழகம் |

மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான  தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

அரசியல் நாகரிகமற்ற விதத்தில் நம் தமிழ்நாட்டுப் பெண்களின் சுயமரியாதையை குலைக்கும் வகையில் ஊடகங்களிலும், பொதுவெளியிலும் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மகளிர் விரோத பாஜகவை கண்டித்து கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நடைபெற்றது..இதில் முன்னாள் அமைச்சர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி தலைமை வகித்தார். நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் கழகச் செயலாளர் சிஎம்.துரை ஆனந்த் அவர்கள் கன்டன உரையாற்றி ஆர்பட்டத்தை துவக்கி வைத்தார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் மற்றும் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா சிறப்புறையாற்றினார்கள்,இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ ,மகளிர் அணியினர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…..