அமைச்சர்கள் பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு: திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம். மாநகர செயலாளர் மு.மதிவாணன் அறிக்கை. இதுகுறித்து திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பாக இன்று சின்னக் கடை வீதியில் இந்தியன் வங்கி அருகில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மலைக்கோட்டை பகுதிசெயலாளர் மருந்துக்கடை ஆர். மோகன் […]
Continue reading …2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ₹17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்கஉள்ளார். நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
Continue reading …திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்தது. தஞ்சையில் எடப்பாடி தலைமையில் நடக்கும் அதிமுக போராட்டம் குறித்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைப்புசெயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநில பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன்,மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினீயர் இப்ராம் ஷா,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் […]
Continue reading …ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து மக்கள் போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆத்திக்காட்டு விளை ஊரின் பெயரை சீயோன்புரம் என்று மாற்றி உள்ளதை கண்டித்து இன்று அப்பகுதி ஊர்மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மகா சபா மாநிலத் தலைவர் தா. பாலசுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு-பெயர் மாற்றத்தை உடனடியாக நீக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தொடரும் என அறிவிப்பு.
Continue reading …இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம். தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சமவேலைக்கு சம ஊதியம் என்ற அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Continue reading …திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் பெண்கள் மதரஸா சார்பில் திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,வக்கீல் சையத் மதானி அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்பாஸ் அலி,அப்துல்லா நூரி,முகமது யூசுப் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.முகமது அலி ஜின்னா நிகழ்ச்சிகளை […]
Continue reading …திருச்சி நாடாளுமன்ற தொகுதியை குறிவைக்கும் அருண் நேரு. அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதற்காக கடந்த சில மாதங்களாக நேருவின் ஆதரவாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேருவின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்றும், மேலும் சிலர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான […]
Continue reading …திருச்சி தென்னூரில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அன்னதானம் வழங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி உள்ள மாவட்ட அலுவலகத்தில் அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் முன்னிலை […]
Continue reading …மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கழகத்தின் காவல் தெய்வம், தங்கத் தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின்..76.வது பிறந்த தினத்தை முன்னிட்டு. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும்.. அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த *மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்* திருஉருவப்படத்திற்கும்.. மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் BSc., BL.Ex.MP.* அவர்கள் மாலை அணிவித்து மலர் […]
Continue reading …திருவரங்கத்தில் பரிதாபம்: மயங்கி விழுந்து போலீஸ்காரர் சாவு. போலீசார் விசாரணை. திருவரங்கம் போலீஸ் ஸ்டேசன் குற்றப் பிரிவில் பணியாற்றி வந்தவர் விநாயகமூர்த்தி. இவர் திருவரங்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்த போது மயக்கம் வருவது போல் கூறியுள்ளார். உடனே அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மருத்துவர்கள் விநாயகமூர்த்தியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக […]
Continue reading …