திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே அவரின் உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு சோமரசம்பேட்டை, காலை […]
Continue reading …திருச்சி துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் ப.குமார் பேச்சு. திருச்சி, துவாக்குடி வட்டச்சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் இரண்டாவது சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தஞ்சை சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிக்கு மிக அருகாமையில் (2 கி.மீ. தொலைவில்) அமைக்கப்பட்டுள்ள இதனை அகற்ற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் திருச்சி புகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் […]
Continue reading …ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பொதுக்கூட்டங்கள்: திமுக அரசின் சாதனைகள விளக்கி வீடு தோறும் திண்ணைப் பிரச்சாரம். திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம். திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், […]
Continue reading …கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு. எஞ்சினில் இருந்து கரும் புகை வெளியானபோதே உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Continue reading …இலங்கையைச் சேர்ந்த சாந்தனை அந்நாட்டுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார் அதன் பின்னர், அவர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார் இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன.24-ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி […]
Continue reading …விபத்தில் சிக்கிய மேயர் பிரியா கார்! சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். ஓட்டுநருக்கு மட்டும் லேசான உள்காயம்! சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த மேயர் காரின் முன்னால் சென்ற கார், திடீரென திரும்பியதால் அதன் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த லாரி மேயர் பிரியா காரின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
Continue reading …வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியை கண்டித்து திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு. வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும், வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பாஜக அரசை கண்டித்தும் இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், வாக்குச்சீட்டு முறையினை நடைமுறை படுத்த வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகளை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியில் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற […]
Continue reading …டெல்லியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் இன்றுதிருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகாமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி விவசாயி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அயிலை.சிவசூரியன், ஜனநாயக […]
Continue reading …தேனி காட்ரோடு அருகே விபத்து. விரைந்து உதவிய தேனி எம்.பி ரவுந்திரநாத். தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் சோழவந்தான் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக சென்று கொண்டிருந்தார். காட்ரோடை தாண்டி செல்லும்போது பரசுராமபுரம் அருகே ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சாலையில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த எம்.பி உடனடியாக தனது காரை நிறுத்தி வேகமாக இறங்கி சென்று விசாரித்தார். அதில் விபத்துக்குள்ளானவர் ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை […]
Continue reading …கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம். கமுதியில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், கல் மண்டபங்கள், சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டது. விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி துவங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனை முடிந்து கடம் புறப்பாட்டுக்கு பின்பு பிள்ளையார்பட்டி பிச்சை […]
Continue reading …