பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் வையம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் கோவில்பட்டியில் உள்ள பாலமுருகன், சரஸ்வதி, வீரபத்திரர், எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்றுநடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைப்பு கிராம தெய்வங்களுக்கு கனிவைத்து வழிபாடு செய்யப்பட்டது. பிறகு வினைதீர்க்கும் விநாயகர் அனுமதியுடன் மகா சங்கல்பம் வருண வழிபாடு வாஸ்து சாந்தி பிரதேசப்பள்ளி கொடுக்கப்பட்டு மாலை 7 […]
Continue reading …திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா. இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதேபோல, இந்த கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்தவகையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத் திருவிழா நாளை(12ந்தேதி) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. […]
Continue reading …10 ஆண்டுகளில் இந்தியா பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி வெள்ளி விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம பீடாதிபதி ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் அருளாசி வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]
Continue reading …தேர்தல் ஆணையம் உத்தரவு: தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் சரத் பவர் என இரண்டு அணிகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அஜித் பவார் அணியே தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்சியின் கொடி, கடிகார சின்னம் ஆகிய இரண்டும் அஜித் பவார் அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை கொண்டாடும் வகையில்தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் அணி […]
Continue reading …திருச்சி மாவட்ட காமராஜர் பேரவைசார்பில், திருவரங்கத்தில் இன்று இலவச மருத்துவ முகாம். காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜோசப் லூயிஸ் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட காமராஜர் பேரவையும் மதுரம் மருத்துவமனையும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் பிறந்தநாளை யொட்டி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் உள்ள ஸ்ரீராம் கல்யாண மஹாலில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட காமராஜர் பேரவை தலைவர் சிவாஜி சண்முகம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் […]
Continue reading …சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலளாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. . அதேபோல் திருச்சி கூனிபஜார் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. அஷ்ரப் அலி அவர் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் எலெக்ட்ரிக்கல் […]
Continue reading …சிறுத்தை குட்டியால் நோய் பரவல். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம். கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாரு சிலோன் காலனி பகுதியில் பிடிபட்ட சிறுத்தை குட்டிக்கு கெனைன் டிஸ்டம்பர் எனும் வைரஸ் தாக்கியதால் மலையோர கிராமங்களில் வளர்க்கப்பட்டு வரும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. மலையோர கிராமங்களுக்கு படகில் சென்றும் முகாம்கள் அமைத்தும் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்*
Continue reading …ஆளுநருக்கு எதிராக திருச்சியில் கருப்பு கொடி. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தர உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக சி.பி.எம் கட்சியினர் திருவானைக்காவல் சந்திப்பு அருகே கருப்பு கொடி காட்டி, அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Continue reading …நெல்லையில் மீண்டும் பரபரப்பு. பந்தல் ராஜா ஒட்டிய வால் போஸ்டர் ஒட்டுமொத்த வெள்ளாளர் சமுதாய மக்களும் திமுக க்கு எதிரான மனநிலைக்கு திரும்புகிறார்களா? தொடர்ந்து ஆ ராசா அவர்களின் சர்ச்சை பேச்சால் திமுகவுக்கு நெருக்கடிகள் தொடர்கிறது. நெல்லையில் வெள்ளாளர் சமுதாய மக்கள் மத்தியில் பிரபலமாக வளர்ந்து வரும் தலைவர் பந்தல் ராஜா. வெள்ளாளர் மக்களுக்கு ஒன்று என்றால் முதலில் களமிறங்கி அரசை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கண்டன வால் போஸ்ட் ஆர்ப்பாட்டங்கள் செய்யக்கூடிய படைகளுக்கு சொந்தக்காரர் பந்தல் […]
Continue reading …தி.மு.க எம்.பி ராசாவை கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம். பந்தல் ராஜா அழைப்பு. கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், தேசிய தலைவர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தி பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பேச்சாளர் 2ஜி ராசா மீதும், தொடர்ந்து சர்ச்சை பேச்சுகளை பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் திமுகவை கண்டிக்கும் விதமாக திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் […]
Continue reading …