டேங்கர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி, உடல் நசுங்கி ஓட்டுநர் பலி. நத்தம்-மதுரை 4 வழிச்சாலையில் தடுப்புகளின் இடையே உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி நேற்று மாலை நடைபெற்று வந்தது. மதுரையைச் சேர்ந்த நிறுவனத்தின் டெம்போ சரக்கு வாகனத்தை, சென்னையில் இருந்து ஒட்டி வந்த உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டியன், தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த டேங்கர் லாரியின் பின்பக்கமாக அதிவேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி […]
Continue reading …*அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்* மேற்கு மாம்பலம் பகுதியில் கட்டாத கட்டிடத்தை கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.மேலும், எம்எல்ஏ தொகுதி நிதியை தவறாக கையாண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2016- 2021ம் ஆண்டு காலக்கட்டத்தில் சத்யா அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் […]
Continue reading …வைகோவுக்கு அறுவை சிகிச்சை – துரை வைகோ தகவல். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக வைகோவின் மகனும், ம.தி.மு.க. கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
Continue reading …முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. ,குமுளியில் நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
Continue reading …துபாயில் இருந்து இன்று காலை புறப்பட்டு மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தம். மதுரையில் இருந்து அந்த விமானத்தில் துபாய் செல்ல இருந்த 168 பயணிகள், மாற்று விமானம் ஏற்பாடு செய்யாததால் ஸ்பைஸ்ஜெட் உழியர்களிடம் வாக்குவாதம்.
Continue reading …*ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு* *கடல் நீர் உள்வாங்கியதால் தரை தட்டி நிற்கும் நாட்டுப் படகுகள் – மீனவர்கள் அச்சம்* *காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக கடல்வள ஆராய்ச்சியாளர்கள் தகவல்* *சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம*
Continue reading …முன்னாள் அதிமுக அமைச்சர் மீதான வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற நடிகை மனு. நடிகை சாந்தினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார். பின்னர் கருவை கலைக்குமாறு மிரட்டினார். இது தொடர்பான புகாரை, மணிகண்டன் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுத்து விட்டார். எனவே, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என […]
Continue reading …பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக இரவில் செம்மண் எடுத்தல். நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமமான பாலக்கோம்பையை சேர்ந்த விவசாய தம்பதியினர் வேல்முருகன் கோமதி அவர்களுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டம் மற்றும் காடு கிராமத்தின் அருகே உள்ளது. இந்தத் தோட்டத்தில் தினந்தோறும் இரவில் அதே கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் அரசு அனுமதி பெறாமலும் […]
Continue reading …குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. 8 நாட்களுக்கு பின் மெயின் அருவியில் அனுமதி =சுற்றுலா பயணிகள் உற்சாகம். மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளிலும் குளிக்க அனுமதி. மெயின் அருவியில் ஆண்கள் பகுதி நடைபாதையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால், பெண்கள் பகுதி வழியாக தடுப்பு அமைத்து ஆண்கள் அனுமதி.
Continue reading …மதுரையில் அறுபத்து மூன்று நாயன்மாா்களின் வீதியுலா. மதுரை ஆதீன குரு மூலவரான திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா, மதுரை ஆதீனம் சாா்பில், கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை காலை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு, திருஞானசம்பந்தரை தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அறுபத்து மூன்று நாயன்மாா்களின் வீதியுலா நடைபெற்றது.
Continue reading …