பாஜக தலைவர் அண்ணாமலை “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இன்று திமுக இளைஞரணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவார்கள். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழியாக இதுவரை மாற்றப்படவில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் கூட தமிழ் கட்டாயம் இல்லை. மத்திய அரசு […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞர், சத்யா தனது காதலுக்கு ஒப்புக்கொள்ளததால் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சத்யா உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சதீஷை கைது செய்து […]
Continue reading …பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். “பூவே பூச்சூடவா,” “நாயகன்,” “அலைபாயுதே,” “காதல் தேசம்“ உட்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிசி ஸ்ரீராம். இவர் தேசிய விருதுகள் மட்டுமல்லாது பல விருதுகள் வென்றுள்ளார். தற்போதும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர், தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம் தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தன் […]
Continue reading …முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் “ஒருநாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை” என்று கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சென்னையில் மழை நீர் வடிகால் பாதாள சாக்கடை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதனால் ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும். சென்னை மட்டுமின்றி அனைத்து […]
Continue reading …அக்டோபர் 15ம் தேதி தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில், “ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது. இது இந்தி படித்தால் மட்டுமே வேலை என்ற நிலையை உருவாக்கி இந்தியா முழுவதும் இந்தி கற்க வேண்டும் என்ற […]
Continue reading …அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை குறித்து “ஓசி” என்று பேசியது தவறுதான் என்று வருந்தியுள்ளார். திமுக அமைச்சர்கள் பலரும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இது மக்களிடையேயும் சில அதிருப்திகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்திருந்தார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி மற்றும் துரைமுருகன் உட்பட […]
Continue reading …அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! என்று விமர்சித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜகவுக்காகப் போட்டியிட்ட நிலையில், இதே தொகுதியில், செந்தில் பாலாஜியும் போட்டியிட்டார். அப்போது, செந்தில்பாலாஜிவை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலைமிரட்டல் உட்பட்ட பல பிரிவுகளில் அரவக்குறிச்சி காவல் நிலையதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாஜக […]
Continue reading …கவிஞர் வைரமுத்து தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?- என்று கேள்வியெழுப்பியுள்ளார். அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததோடு மட்டுமல்லாமல், ஐ.நா சபையின் அலுவல மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் […]
Continue reading …டிடிவி தினகரன், “கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார். திமுக பொதுக்குழுவில் சமீபத்தில் கூடியது. அதில் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கனிமொழி மீதான பயம் காரணத்தினால் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அவருக்கு பதவி கொடுக்காவிட்டால் திமுக இரண்டாகி இருக்கும். தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை […]
Continue reading …பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான் என்று கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மட்டும்தான் தாய்மொழியில் படிக்காத மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையின் முதல் அடிப்படையே தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதனை ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அலுவல் மொழி இந்தி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த விஷயமே தவிர அது பாஜக கொண்டு வந்தது அல்ல. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து […]
Continue reading …