Home » Archives by category » அரசியல் (Page 178)

ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

Comments Off on ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு!

மக்கள் விரோத – ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து வரும் 20ஆம் தேதி, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. நாடு முழுவதும் 19 கட்சிகளின் சார்பில், வரும் செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வரை, பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளது. இதில், பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நாடு முழுவதும் […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டி!

Comments Off on விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டி!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாகத்தகவல் வெளியாகிறது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்ப்யு மனுதாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதிதான் வேட்புமனுதாக்கல் கடைசித் தேதி என்பதல் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இதில் போட்டியிட உள்ளன. இந்நிலையில்ல் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிட […]

Continue reading …

புதிய ரயில் பாதை திட்டம் : ரயில்வே அமைச்சருடன் எல் முருகன் சந்திப்பு !

Comments Off on புதிய ரயில் பாதை திட்டம் : ரயில்வே அமைச்சருடன் எல் முருகன் சந்திப்பு !

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகலரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து உரையாடினார். மக்களின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும்,அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும்அகலரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றும்டாக்டர் முருகன் கேட்டுக்கொண்டார். இது பாரம்பரிய […]

Continue reading …

ரோஷ் ஹஷனாவுக்கு உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

Comments Off on ரோஷ் ஹஷனாவுக்கு உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் வாழ்த்து!

ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.   பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியதாவது: “இன்று ரோஷ் ஹஷனாவைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னடுக்கும் இஸ்ரேலின் தோழமையான மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.“

Continue reading …

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு – சீமான் ஆறுதல்!

Comments Off on முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு – சீமான் ஆறுதல்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு – சீமான் நேரில் சென்று ஆறுதல்  முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் உள்ள பன்னீர்செலவம் அவர்களது இல்லத்தில் நேரில் சென்று ஆறுதலைத் தெரிவித்தார். இதுகுறித்து சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள துயர் பகிர்வு செய்தியில் கூறியிருப்பதாவது, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், […]

Continue reading …

பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இல்லத் திருமண விழா!

Comments Off on பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இல்லத் திருமண விழா!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், திருமதி சரஸ்வதி அம்மையார் ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், சௌமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சங்கமித்ரா சௌமியா அன்புமணி – சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை மருத்துவர் இராமதாஸ் சென்னையில் இன்று நடத்தி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, பாமக […]

Continue reading …

ஓபிஎஸ் மனைவி மறைவு – முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Comments Off on ஓபிஎஸ் மனைவி மறைவு – முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவரது மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ” தமிழகத்தின் […]

Continue reading …

மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

Comments Off on மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை!

மேக்கேதாட்டில் கர்நாடகம் அணை கட்டினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குக் கர்நாடகத்திலிருந்து திறக்க வேண்டிய தண்ணீரை மட்டுமின்றி, அம்மாநில அணைகளிலிருந்து மிகையாக வெளியேறும் காவிரி வெள்ள நீரையும் கர்நாடக அரசு தேக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே, மேக்கேத்தாட்டில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால்,  தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பையும் மீறி,  மேக்கேத்தாட்டிற்கு அனுமதி அளிக்கும் வேலைகளை இந்திய அரசு […]

Continue reading …

500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு – சு.வெங்கடேசன் எம்.பி!

Comments Off on 500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு – சு.வெங்கடேசன் எம்.பி!

கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிற மாணவர்களுக்கு உயர்கல்வி கொடுப்பது அரசின் கடமை. அதற்கான முறையில் கல்விக்கடன் திட்டத்தை உருவாக்கி அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அதன் படிநிலைகளுள் முதலானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்படும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளை பாதித்துள்ளது. எனவே இது குறித்து மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை […]

Continue reading …

சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!

Comments Off on சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்!

தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பதாகவும், அது செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமெனவும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலையை நாடெங்கிலும் பன்மடங்காக உயர்த்தி, அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலையேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டு, சமையல் எரிகாற்று உருளையின் விலையையும் அதிகரிக்கச்செய்துவிட்டு, இப்போது சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்த எண்ணும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வன்செயல் பெரும் சினத்தையும், கடும் […]

Continue reading …