அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு பெண்கள் கும்ப மரியாதை செலுத்தி மலர் தூவி வரவேற்றார்கள். அவர் கூட்டத்தில் பேசியபோது, “தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி உள்ளார். ஆனால் திமுகவின் கூட்டணி பிரதமராக யாரை […]
Continue reading …கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தபின் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் […]
Continue reading …நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் கௌசிக் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட […]
Continue reading …பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இம்முறை கூட்டணி இல்லை என சிரோமனி அகாலி தளம் கட்சி அறிவித்துவிட்டது. பாஜகவும் தனித்து போட்டியிட உள்ளதாக […]
Continue reading …தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நாற்பது தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் முடிவடைகிறது. சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. அவர் […]
Continue reading …கடலூர் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் தங்கர்பச்சான் “எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, உங்களுக்கு தான் பிரச்சனை” என்று பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பாராளுமன்ற தொகுதி தொகுதியில் பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் களம் இறங்கியுள்ளார். அவரது பிரச்சாரத்தில், “நான் ஏழு வயதில் பார்த்த கடலூர் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எத்தனை தேர்தல் வந்தாலும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் இந்த பகுதி மாறவே இல்லை. வளர்ச்சி […]
Continue reading …வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதுவையை சேர்த்து 10 தொகுதிகள் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதுவரை 9 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் அப்பகுதியில் […]
Continue reading …தந்தையின் மகனும் போனில் அழுது நாடகம் போட்டதை மறந்து விடுவோமா எம்.பி சிவி சண்முகம் காட்டம். இட ஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. தந்தையும், மகணும் போனில் அழுது நாடகம் போட்டதை மறந்துவிடுவோமா? 10.5% உள் ஒதுக்கீடு ரத்தானாலும் பரவாயில்லை என்றார் ராமதாஸ். பாமகவை எதிர்த்து களம் கண்டபோது எல்லாம் நாங்கள் வென்றுள்ளோம்: அதிமுக மாநிலங்களவை MP சி.வி சண்முகம் பேச்சு.
Continue reading …அமலாக்கத்துறை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து விவரங்களை தரக்கோரி புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விராலிமலை எம்.எல்.ஏ ஆவாக இருக்கும் சி.விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விஜயபாஸ்கர் […]
Continue reading …நேற்று முன்தினம் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வருகிற 25-ம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. டில்லி அரசின் 2021- 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் ஊழல் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா உட்பட 12 பேரை கைது செய்தனர். இம்முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு […]
Continue reading …