இன்று மாலை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Continue reading …இன்று காலை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐயப்பனின் மகன் ராகவன் இன்று காலை தேர்வு முடிவை பார்த்ததும் தான் தோல்வியடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து […]
Continue reading …மத்திய அரசு பணியிடங்கள் சிலவற்றை தனியார் துறைகள் மூலம் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யூபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் மத்திய அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு ஆட்கள் அமர்த்தப்படுவது வழக்கம். சமீபத்தில் மத்திய அரசின் 12 துறைகளில் உள்ள இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான பணியிடங்களை தனியார் துறை நிபுணர்களை கொண்டு நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு […]
Continue reading …இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வெளியாகின, இதனை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தேர்வு துறை இயக்ககம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி […]
Continue reading …இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்களின் தகவல்களையும் அறியும் வகையில் ‘திருக்கோவில்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான திருக்கோவில்கள், தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலங்கள், திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன. கோவில்கள் யாவும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பக்தர்கள் கோவில்களை பற்றி முழுவதுமே அறிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை ‘திருக்கோவில்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் முருகன் கோவில்கள், அம்மன் கோவில்கள், பெருமாள், சிவன், விநாயகர் கோவில்கள் என […]
Continue reading …இன்று 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின, இவர்களுக்கான மறுகூட்டல் மற்றும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 24 முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு இரு வகுப்பு மாணவர்களும் தங்கள் தற்காலிக […]
Continue reading …இன்று ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம். இயற்கையோடும், […]
Continue reading …பாஜக தமிழகத்தில் வரும் 20ம் தேதி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் வேட்டை தமிழகம் முழுதும் காவல்துறை நடத்தியது. நூற்றுக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக வரும் 22ம் தேதி பேரணி நடத்தி […]
Continue reading …வீட்டிலேயே கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளார் பெண் ஒருவர். இதை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிரழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கள்ளச்சாராய வேட்டை நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான கள்ள சாராயம் காய்ச்சும் வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆரணி அருகே வடுகசாத்து என்ற கிராமத்தில் வீட்டிற்குள் கேஸ் அடுப்பு […]
Continue reading …ஒரே நேரத்தில் கணவன் மனைவி இருவருக்கும் கலெக்டர் பதவி கிடைத்துள்ளது. இந்த தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேற்றைய மாவட்ட கலெக்டர் இடமாற்றம் குறித்து அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகளான விஷ்ணு சந்திரன் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டராகவும் சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜித்தும் நியமனம் செய்து கொண்டனர். நேற்று நடந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் விஷ்ணு மற்றும் ஆஷா ஆகிய கணவன் மனைவி இருவருமே பக்கத்து பக்கத்து மாவட்ட கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் விஷ்ணு நகராட்சி நிர்வாகத்துறையிலும் […]
Continue reading …