Home » Archives by category » தமிழகம் (Page 140)

250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

Comments Off on 250 ஏக்கர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை!

பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன்னுடைய 250 ஏக்கர் நிலத்தை கொடுக்க முன்வந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த முரளி கிருஷ்ணா திருப்பதி ஏழுமலையான் பக்தர். அவர் தன்னிடம் உள்ள விவசாய நிலமான 250 ஏக்கரை ஏழுமலையானுக்கு நன்கொடையாக கொடுக்க முன்வந்துள்ளார்.இதற்கான ஆவணங்களை அவர் தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. 250 ஏக்கர் நிலத்தை தேவஸ்தான பெயருக்கு பத்திர பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் […]

Continue reading …

கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

Comments Off on கும்பகோணத்தில் 60 நாய்கள் கொன்று புதைப்பா?

60 தெருநாய்களை கொன்று ஆற்றங்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் புதைத்ததாக பொதுமக்கள் புகாரளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான தெருநாய்கள் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் இருப்பதாகவும் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களை நாய்கள் கடித்ததாகவும் புகாரளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு பல புகார்கள் குவிந்ததையடுத்து கடந்த ஒன்பதாம் தேதி இரவு நாய் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 நாய்கள் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நாய்கள் இரும்பு ராடுகளால் அடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் […]

Continue reading …

சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

Comments Off on சிஎஸ்கே அணியை தடை செய்ய பாமக எம்எல்ஏ பேச்சு!

பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் இன்று சட்டப்பேரவையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியை காண டிக்கெட் வாங்குவதற்காக முந்தைய நாள் இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை […]

Continue reading …

மருமகளை கொலை செய்த மாமனார்!

Comments Off on மருமகளை கொலை செய்த மாமனார்!

நெல்லையில் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய தடையாக இருந்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தங்கராஜின் மனைவி உயிரிழந்ததால் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது மகன் தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது எழுதிக் கொடுத்த வீட்டை திரும்ப தனது மகனிடம் கேட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து மகன் மற்றும் மருமகள் வீட்டை திரும்ப தர மறுத்ததோடு 50 வயதில் […]

Continue reading …

செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

Comments Off on செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

செவிலியர் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரையடுத்த வற்றாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி சூர்யா (32). இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற ஒரு மகன்கள். சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறு பாட்டால் தகராறு எழுந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த […]

Continue reading …

முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

Comments Off on முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் ரவி கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக ஆளும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது குறித்தும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. […]

Continue reading …

வானிலை மையத்தின் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

Comments Off on வானிலை மையத்தின் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா முழுதும் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் […]

Continue reading …

மக்கள் நீதி மய்யம் கேள்வி!

Comments Off on மக்கள் நீதி மய்யம் கேள்வி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா மக்களை பதற்றத்திலேயே வைத்துக் கொள்ள மத்திய அரசு முயல்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம் என ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய அரசு, தனது பிரதிநிதி மூலமாக மாநில அரசின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகவே மக்கள் நீதி மய்யம் இதைப் பார்க்கிறது. பல்வேறு […]

Continue reading …

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

Comments Off on தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழக மீனவர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 10கிமீ தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, தமிழக […]

Continue reading …

மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசிக்காக கோரிக்கை!

Comments Off on மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசிக்காக கோரிக்கை!

தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி 300-க்கும் அதிகமான பாதிப்புகளும் சென்னையில் மட்டும் 100க்கும் அதிகமான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு […]

Continue reading …