Home » Archives by category » அரசியல் (Page 100)

அண்ணாமலை பாதயாத்திரை; ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!

Comments Off on அண்ணாமலை பாதயாத்திரை; ஈபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு!

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். மேலும் அண்ணாமலையின் பாதையாத்திரை துவக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி இந்த துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக […]

Continue reading …

நாடாளுமன்ற கூட்டத்தில் சதி; அமைச்சர் அமித்ஷா!

Comments Off on நாடாளுமன்ற கூட்டத்தில் சதி; அமைச்சர் அமித்ஷா!

மத்திய அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதியிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறும்போது, “ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூலை 19ம் தேதி மணிப்பூர் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து நாட்களாக அமளி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்திற்கு முதல் நாள் இந்த வீடியோ வெளியாக வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் […]

Continue reading …

அண்ணாமலை குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்!

Comments Off on அண்ணாமலை குறித்து ஆர்.எஸ். பாரதி விமர்சனம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் இரண்டாம் பாகத்தை நேற்று வெளியிட்ட இதுகுறித்த ஆதாரங்களையும் அவர் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. திமுக தரப்பில் இதுகுறித்த பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பேட்டியில், “அண்ணாமலை என்ன கொடுத்தார் என யாருக்கும் தெரியாது. நான் கூட சொல்லலாம் அண்ணாமலை ரூ.2,500 கோடிக்கு பினாமி என்று. ஆனால், அதனை நாம் நிரூபிக்க வேண்டும். திமுக எதையும் சந்திக்க தயார். அண்ணாமலை […]

Continue reading …

அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை!

Comments Off on அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை துவக்கி மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகம் வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நாளை மறுநாள் பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரம் கோயிலிலிருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக நாளை டில்லியிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். இதனை அடுத்து மாலை 5:45 மணிக்கு ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதன் பின் […]

Continue reading …

மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 36 லட்சம் விண்ணப்பங்கள்!

Comments Off on மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 36 லட்சம் விண்ணப்பங்கள்!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சமீபத்தில் பெறப்பட்ட நிலையில் மூன்றே நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 24ம் தேதி மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம்களை தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுதும் உள்ள 20,765 நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 4ம் தேதி வரை விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு […]

Continue reading …

வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு எப்போது?

Comments Off on வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு எப்போது?

வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நெல்லை இடையே இயக்கப்படுவது எப்போது என்ற தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து மைசூர் மற்றும் சென்னையிலிருந்து கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து -நெல்லைக்கு இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. சென்னையிலிருந்து -நெல்லைக்கு இடையே வந்தே பாரத் ரயில் கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. […]

Continue reading …

அப்துல் கலாமை நினைவு கூறும் கமல்ஹாசன்!

Comments Off on அப்துல் கலாமை நினைவு கூறும் கமல்ஹாசன்!

மக்கள் ஜனாதிபதி என்றும், ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள் தயாரித்து கொடுத்தார். எளிமையாக வாழ்த்த அவர், தன் பதவி காலத்திலும் சரி, அவர் பதவியில் இருந்து விலகிய பின்னும் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்று வாழ்ந்தவர் ஆவார். லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய சாதனையாளர். இளைஞர்களே கனவு காணுங்கள் தூங்கும்போது வருவதல்ல கனவு, உங்களை எது தூங்கவிடாமல் செய்வதே […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு!

Comments Off on சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருமணத்திற்கு பின்னர் கணவன் சேர்க்கும் சொத்துக்களில் மனைவிக்கும் சமபங்கு உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் இச்சட்டத்தை பின்பற்றி சட்டம் ஏற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் வழங்கிய இத்தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மனைவியின் உழைப்பை மதிப்பற்றதாக எப்படி பார்க்க முடியும் என்ற வாதங்களை நீதிமன்றம் முன் […]

Continue reading …

உதயநிதி குறித்து முதலமைச்சர் பெருமிதம்!

Comments Off on உதயநிதி குறித்து முதலமைச்சர் பெருமிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும், விளையாட்டுதுறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இன்று இந்த போட்டிகள் நிறைவு பெற்றது. இன்று நடந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய போது, “முதலமைச்சர் கோப்பையை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் விளையாட்டுத்துறை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. உலக […]

Continue reading …

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

Comments Off on தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!

மைசூர் பெங்களூரு அதிவிரைவு சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ செல்ல தடை விதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவில் செல்வதற்காக புதிய சாலை திறக்கப்பட்டது. இச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக செய்திகள் வெளியானது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் இந்த சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாற்று […]

Continue reading …