Home » Archives by category » அரசியல் (Page 105)

தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

Comments Off on தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து […]

Continue reading …

சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

Comments Off on சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் […]

Continue reading …

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

Comments Off on தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை “மதுரை உயர்நீதிமன்றம் கலைஞர் போட்ட பிச்சை” என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் எவ வேலு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று […]

Continue reading …

உயர்மட்ட பாலம் குறித்து தமிழக அரசு அரசாணை!

Comments Off on உயர்மட்ட பாலம் குறித்து தமிழக அரசு அரசாணை!

தமிழக அரசு சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உயர்மட்ட பால திட்டத்திற்கு […]

Continue reading …

மின் வேலிகள் அமைக்க அனுமதி கட்டாயம்!

Comments Off on மின் வேலிகள் அமைக்க அனுமதி கட்டாயம்!

தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.சூரியசக்தி மின் வேலிகள் உள்பட அனைத்து மின் வேலிகள் அமைப்பதற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதனை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் வேலிகள் அமைப்பு என்பது காப்பு காடுகளிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயி […]

Continue reading …

தமிழக காவல் நிலையத்தை கிண்டல் செய்த கவர்னர்!

Comments Off on தமிழக காவல் நிலையத்தை கிண்டல் செய்த கவர்னர்!

புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் உள்ள எலிகள் எல்லாம் கஞ்சாவை தேடி காவல் நிலையம் வருகின்றன என கிண்டல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “நீதிமன்றத்தில் குறைந்த அளவு கஞ்சாவை சமர்ப்பிக்கும் காவல்துறை கஞ்சா வழக்கில் தொடர்புடைய இருவரை தப்பிக்க வைத்து விட்டனர். காவல் நிலையத்தில் வைக்கப்படும் கஞ்சாவுக்கு யார் பாதுகாப்பு? எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? 22 கிலோ கஞ்சாவை காவல் நிலைய காவல்துறையினர் […]

Continue reading …

மாமன்னன் படம் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on மாமன்னன் படம் எடப்பாடி பழனிசாமி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “மாமன்னன்” திரைப்படம் “ஓடுனா என்ன ஓடலைன்னா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “மாமன்னன்” திரைப்படம் ஓடுனா என்ன? ஓடலைன்னா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? இதுவா வயிற்று பசியை போக்க போகிறது? அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டது, கொரனாவை சிறப்பாக எதிர்கொண்டது, ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டது. […]

Continue reading …

ஒரே மேடையில் அமித்ஷா – ஸ்டாலின்!

Comments Off on ஒரே மேடையில் அமித்ஷா – ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் தமிழகத்தில் 31வது தென்மண்டல குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான 31-வது தென் மண்டல குழு கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக […]

Continue reading …

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு 6ம் தேதி தீர்ப்பு!

Comments Off on அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு 6ம் தேதி தீர்ப்பு!

சிறப்பு நீதிமன்றம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 6ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த 1996&-2001ம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சைதாப்பேட்டையில் 3,360 சதுர அடி நிலத்தை போலி ஆவனம் தயாரித்து மாமியார் பெயரில் பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் […]

Continue reading …