
அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரை அழைத்துச் சென்றதாகவும், அவர்களை எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவில்லை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய ராணுவத்தின் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்கு இருக்கின்றனர். இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவல் சார் உதவியாளர் விஜயகுமாரை அமலாகத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. […]
Continue reading …
“அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது, அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” என அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த […]
Continue reading …
சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. “லியோ” படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பாடல் காட்சி 11ம் தேதியுடன், சஞ்சத் தத் தன் பாடிகார்டுகளுடன் நடந்து வருவதுடன், அப்போது, […]
Continue reading …
அதிமுக கட்சியின் ஐடி விங் டுவிட்டர் பக்கத்தில், “எங்கள் ஆட்சியில் அதிகாரி அறையில் சோதனை, உங்கள் ஆட்சியில் அமைச்சரின் அறையில் சோதனை நடைபெறுகிறது” என பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து குறிப்பிடப்பட்ட பதிவில், “அதிமுக ஆட்சியில் மேடை தோறும் தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு குறித்து வீராவேசமாக முழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! எங்கள் ஆட்சியிலாவது தலைமை செயலகத்தில் அதிகாரியின் அறையில்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது, ஆனால் இன்று உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சரின் அலுவலகத்திலேயே சட்டத்துக்கு […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமி “சமூகநீதிக்கு எதிரான இந்த திமுக அரசிடமிருந்து இளைய சமுதாயத்தை காத்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தி குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் உறுதியேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார். இன்று குழந்தைத் தொழிலாளார் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி விளையாட்டு மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, சிறை கைதிகளுக்கு சிக்கன்: இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றின் போது, “திமுக எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கிவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனால் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய நிலையில் திமுக அரசு சத்து இல்லாத […]
Continue reading …
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஜெயக்குமார் பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது பேட்டியில், “உலகம் முழுவதும் உள்ளள 10 கோடிக்கும் மேலுள்ள நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்கள். உலகம் முழுவதும் போற்றக்கூடிய தலைவர். எல்லா சாலைகளும் போயஸ் கார்டன் நோக்கி என்ற வகையில், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை முன்னாள் பிரதமர்கள், இந்நாள் பிரதமர்கள், பாஜக தலைவர்கள் […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். உதயநிதி அவரது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும், இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும், இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும் & என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அசூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உதட்டளவில் தமிழ், தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று […]
Continue reading …
நடிகை குஷ்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிங்கம் என்றும், அவர் உண்மையைத்தான் பேசுவார் என்றும் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில், “தி டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது, ஊழல்வாதி என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வன்மத்தைக் கக்கியுள்ள அண்ணாமலையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவைத் தேடி போயஸ் கார்டனுக்கு மோடி, அருண்ஜெட்லி உள்ளிட்டோர் வரிசையாக காத்திருந்தனர். கடந்த 2014ம் […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் எம்பி பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவின் முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் திடீரென பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்து கொண்டதையடுத்து அவரை பாஜகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர். அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து அண்ணாமலை, “பிரதமர் நரேந்திரமோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் […]
Continue reading …