
வடமாநில விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம்- குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]
Continue reading …
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். நீண்ட நாளாக பேச்சு வழக்கில் இருக்கும் மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த மேகதாது திட்டம் தமிழர்களின் நீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தை வெகுவாக பாதிக்கும் என தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த துணை […]
Continue reading …
நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்து உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துமே இவ்விழாவை புறக்கணிக்க உள்ளனர். அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளன. கிட்டத்தட்ட திமுக […]
Continue reading …
காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணைமுதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது, பிஎப்ஐ போன்று வெறுப்புணர்வை தூண்டும் பஜ்ரங் தல் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் சித்தப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இன்னும் துறை ஒதுக்கவில்லை. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் […]
Continue reading …
நாளை புதிதாக பாராளுமன்றக் கட்டிடம் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்காக செங்கோல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாடுதுறை ஆதினம் வழங்கியது. இது நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளது” என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்து […]
Continue reading …
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது; அளவுக்கு அதிகமானது; தேவையற்றது ஆகும். தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் […]
Continue reading …
சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளார் தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பளித்த புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் செய்து உள்ளார். அவர் இந்த இரு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். இன்று காலை ஜப்பான் சென்ற தமிழக முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]
Continue reading …
புதிதாக டில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. அதை சிறப்பிக்கும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் டில்லியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. வரும் மே 28ம் தேதியன்று பிரதமர் மோடி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பை சிறப்பிக்கும் விதமாக ரூ.75 நாணயத்தை வெளியிடுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும், […]
Continue reading …
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறித்து கரூர் எஸ்பி விளக்கமளித்துள்ளார். இன்று காலை முதல் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வருமானவரித்துறையினர் சென்றபோது திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி, “கரூர் […]
Continue reading …
ஆ.ராசா, “கருணாநிதியால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி ஆனார். இல்லையென்றால் இன்னும் அவர் ஆடுதான் மேய்த்துக் கொண்டிருப்பார்” என்று அவர் பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். விழா ஒன்றில் பேசிய ஆ.ராசா, “கலைஞரின் பேனாவால் போடப்பட்ட கையெழுத்தால்தான் அண்ணாமலை ஐபிஎஸ் ஆனார்” என்று பேசினார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “என் பேனா, என் மை, என் பெற்றோர், நண்பர்கள் மற்றும் எனது ஆசிரியர்கள் அளித்த ஆதரவு. என்னைப்போல் பலர், அடுத்த கட்டத்திற்கு […]
Continue reading …