
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தர மாட்டோம்” என்று கூறியுள்ளார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்திய விவகாரம் தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு. பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை […]
Continue reading …
டிடிவி தினகரன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கை வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றாவது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தங்களது வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் விவசாய நிலங்கள் பறிபோன கவலையில் உண்ணாவிரதம் இருந்த […]
Continue reading …
கவியரசு வைரமுத்து இன்று தமிழர்கள் நாசா, மைக்ரோசாஃப்டில் அதிகம் பணிபுரிவதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தனி£யர் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் திமுக சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் கவியரசு வைரமுத்து பேசும்போது, “நாசா, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் தமிழர்கள் அதிகம் பணிபுரிய […]
Continue reading …
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட சென்று வந்தார். இது குறித்து அவர் முதலமைச்சரிடம் விளக்கியதாக தகவல் வெளியானது. அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலினின் ஒடிசா பயணத்தை சுற்றுலா சென்று வந்ததாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும் போது யாராவது கூலிங் கிளாஸ் போட்டு வருவார்களா? சூட்டிங் சென்ற மாதிரி அவர் ஒடிசாவுக்கு சென்று வந்துள்ளார். ஒடிசா சென்றவர்கள் சம்பவம் […]
Continue reading …
சாக்ஷி மாலிக் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிரிஜ்பூஷண் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]
Continue reading …
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது என்று நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பதிவில், “ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை DMK files இரண்டாம் பாகம் வரும் ஜூலை மாதம் முதல் வாரம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் DMK files முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து அண்ணாமலை மீது முதலமைச்சரின் குடும்பத்தினர் உள்பட திமுகவினர் வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பினர். இந்த சொத்து பட்டியல் வெளியான ஒரு சில நாட்களில் தான் ஜி ஸ்கொயர் மற்றும் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். “பல்லவி அனுபல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம். பின்னர், “இதய கோவில்,” “பகல் நிலவு,” “மௌனராகம்,” “நாயகன்” “தளபதி,” “ரோஜா,” “காற்றுவெளியிடை,” “செக்கச்சிவந்த வானம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில், இவர் இயக்கத்தில், “பொன்னியின் செல்வன்-1, 2” ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று […]
Continue reading …
வடமாநில விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம்- குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]
Continue reading …