
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக பேசிக் கொள்ளப்படுவது குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் நடிப்பையும் தாண்டி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார். விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் அதை நோக்கியே உள்ளதாக தெரிகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி கைவிட உடனே உத்தரவிட வேண்டும் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். சென்னை, திருவல்லிகேணியில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டும் முடிவை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து, டிடிவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய பள்ளிக்கட்டடம் கட்டப்படும் வரை, தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை சார்பில் கூறப்பட்டது. அங்கு திருமண மண்டபம் கட்டப்பட […]
Continue reading …
இன்று கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளுடனான வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று கர்நாடக சட்டமன்றத்தின் 224 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை முதலாக வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் மக்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. […]
Continue reading …
சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை நிதியமைச்சர் பதவி மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது. வருகிறது. தற்போது பிடிஆர் பேசியதாக கூறப்படும் மூன்றாவது ஆடியோ விரைவில் வெளியாகப் போவதாகவும், இந்த ஆடியோவில் முதலமைச்சர் குடும்பத்தின் முக்கிய நபர் குறித்த அதிர்ச்சி தகவல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இரண்டு ஆடியோவுக்கே திமுகவினர் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது ஆடியோ வெளியானால் என்னவாகும் என்பதை […]
Continue reading …
ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சந்திப்பின்போது அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்து போவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து பல நாட்டு அதிபர்களை சந்தித்து வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கு முன்னணி நாடுகளின் ஆதரவு பெருகி வருகிறது. வரும் ஜூன் மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்ல இருப்பதாக […]
Continue reading …
இன்று கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கருத்து நிலவி வந்தது. தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக தான் அதிக இடத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 94 முதல் 117 இடங்கள் வரை வெல்லும் என்றும் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா […]
Continue reading …
நேற்று பிளஸ் டூ தேர்வின் முடிவுகள் வெளியானது. அதில், 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய நந்தினியின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி மாணவி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 600க்கு 600 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இதனையடுத்து அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று அவர் முதலமைச்சரை சந்தித்து ஆசி பெற்றார். இச்சந்திப்பைப் பற்றி நந்தினி கூறும் […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வரும் காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார். அடுத்த கட்டமாக சசிகலாவையும் விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் சூழ்நிலையில் திடீரென நேற்று டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்தித்து இருவரும் இணைந்து அதிமுகவின் மீட்போம் என தெரிவித்தார். “சசிகலாவையும் விரைவில் சந்திக்க உள்ளேன். […]
Continue reading …
நாளை நடைபெறவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டன. பாஜக அரை லிட்டர் பால் இலவசம், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர் இலவசம் போன்ற வாக்குறுதிகளை அளித்தது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும் கொடுத்தது. கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்த பிரியங்கா காந்தி அங்கும் சில இலவச வாக்குறுதிகளை அளித்துள்ளார். […]
Continue reading …
கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பதவிகள், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “திமுக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாக செய்திகள் வருகின்றன. பட்டியலினத்தவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி ஆகும். இந்த அமைச்சரவை மாற்றத்தில் பட்டியலினத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வழங்க […]
Continue reading …