
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தால் விபரீதம் எங்களை குற்றம் சொல்ல கூடாது” என்று கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் மேற்குவங்க மாநிலத்திலுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டால் அதற்கு பாதுகாப்பு அளிக்க […]
Continue reading …
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையின் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேட்டியளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 4016 மெகாவாட் ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது. 45 நாட்களில் 19,387 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது, […]
Continue reading …
கடந்த 10ம் தேதி 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. எனவே, காங்கிரஸ் 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இதை அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவு வெளியாகி […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிகாரிகள், போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இவர் இன்று மானாமதுரையில் செய்தியாளர்களிடம், “போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே தெரியாமல் இருந்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயம் விற்ற 1500 பேரை எப்படி கைது செய்திருக்க முடியும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் தான் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வாங்குவது தவறில்லை. பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது, மற்ற கட்சி […]
Continue reading …
மத்திய அமைச்சர் எல்.முருகன் “கேன்ஸ்’’ திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டதில், “ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்’’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டிலுள்ள கேன்ஸ் என்ற நகரில் நடைபெறும். இவ்வாண்டு 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 27ம் தேதி வரை என மொத்தம் 12 நாட்கள் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. விழாவில், இந்தியாவின் சார்பில், நடிகை ஈஷா குப்தா, சாரா […]
Continue reading …
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து எந்த நடிகரும், சமூக நல ஆர்வலரும் குரல் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 14 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் வேட்டை தொடங்கிய நிலையில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய போது கள்ளச்சாராய உயிர் இழப்பு குறித்து எந்த நடிகரும் […]
Continue reading …
கக்கன் அவர்களின் 3வது மகன் சத்தியநாதனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். 1957 முதல் 1967 வரை தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்தவர் அமைச்சர் கக்கன். இவர் அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் நேர்மையாக செயல்பட்டதற்காக இன்றளவும் எல்லோராலும் போற்றப்படுகிறார். இவரது 3வது மகன் சத்தியநாதன் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் காலனியில் வசித்து வந்த அவர், தன் வீட்டில் வழுக்கி விழந்து உயிரிழந்துள்ளார். […]
Continue reading …
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தலின் போது தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் தற்போது சாராய ஆறு தான் ஓடுகிறது என தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்துள்ளது. தங்குதடையின்றி தமிழக முழுதும் கள்ளச்சாராயம் கிடைக்கிறது. தற்போது 1600 பேர் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசும் அரசும் தவறிவிட்டது, இதனால் பல உயிர்களை […]
Continue reading …
நடிகை நமீதா, “கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை, மீண்டும் அதே மாநிலத்தில் விரைவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. கோவையில் செய்தியாளர்களின் சந்திப்பில் நடிகை நமீதா, “பாரதிய ஜனதா கட்சியின் மட்டும்தான் ஒருங்கிணைந்த மக்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றது முதல் […]
Continue reading …
மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே காரணைப் புதுச்சேரி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மதுக்கடையையும், அதன் குடிப்பகத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சூறையாடியுள்ளனர். காரணைப் புதுச்சேரி பகுதியில் உள்ள மதுக்கடை மது குடிக்கும் குடிமகன்கள் போதையில் அருகில் உள்ள வீடுகளின் வாசல்களில் மயங்கி விழுந்து கிடப்பதும், அப்பகுதி வழியாக […]
Continue reading …