
இன்று அமைச்சர் துரைமுருகன் திடீரென ஆளுனர் ரவியை நேரில் பார்க்க செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் ரவியை கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று காலை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ ஆகி சட்டமன்றத்தில் விவாதம் செய்யட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆளுநர் ரவியை சந்திக்க சென்னை கிண்டியிலுள்ள ராஜபவனுக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட […]
Continue reading …
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீராக தாண்டன் அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாரகவும் உள்ள நிலையில், தற்போது, உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நம் நாட்டின் பொருளாதார இயக்கம், இன சமத்துவம், சுகாதாரம், குடியேற்றம், கல்வி ஆகிய […]
Continue reading …
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் மாணவியின் உள்ளாடையை அகற்றியது மிகப்பெரிய வன்முறை என்று கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நீட் தேர்வை எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கலாச்சாரமும், பண்பாடும் போற்றி பாதுகாக்கப்படும் தமிழ்நாட்டில் இத்தகைய இழிவான செயல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது மாணவியின் உள்ளாடையிலிருந்து ஒலி வந்ததால் உள்ளாடையை […]
Continue reading …
நாளை மறுநாள் தமிழக அமைச்சவை மாற்றம் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தூக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமீபத்தில் ஒரு ஆடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. நாளை மறுநாள் தமிழக அரசு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்படும் அல்லது அவர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை […]
Continue reading …
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு தமிழக ஆளுநர் ரவியின் புகார் காரணமாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். R சமீபத்தில் ஆளுநர் ரவி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறியது குறித்து கூறிய அவர் ’அது பொய் வழக்கு’ என்று தெரிவித்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக பொய் வழக்கு போடப்பட்டது என்றும் இந்த வழக்கில் 6, 7ம் வகுப்பு […]
Continue reading …
இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உம்மன் சாண்டியின் மகன் தன்பேஸ்புக் தளத்தில், இதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விரைவில் உடல் நலம்பெற பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Continue reading …
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் தீட்சதர் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் ரவி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும், சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஏன் கூறுகிறார். ஆளுநர் என்ன ஆண்டவரா? என்று கேள்வி எழுப்பினார். தீட்சதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா? ஆளுநர் குறிப்பிடுவது போல சிறுமியர்களுக்கு இரட்டை விரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த […]
Continue reading …
வரும் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூரில் கலவரம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த அமித்ஷா உடனடியாக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டில்லி சென்றுள்ளார். அவர் மணிப்பூர் மாநில முதலமைச்சர் மற்றும் […]
Continue reading …
ஆளுனரே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்லிவிட்டார், அதனால் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ரவி நேற்று அளித்த பேட்டி ஒன்றில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தெரிவித்து இருந்தார். இக்குற்றச்சாட்டுக்கு திமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை […]
Continue reading …
சிபிஐ மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்து கைது செய்ய வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆளுநர் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார். குறிப்பாக நேற்று அவர் திராவிட மாடல் குறித்து பேசிய கருத்துக்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆளுநரின் கருத்துக்கு ஒரு சிலர் பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பிரிவினர் பெரும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இது […]
Continue reading …