Home » Archives by category » அரசியல் (Page 119)

புதுவை அரசு வெளியிட்ட பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பு!

Comments Off on புதுவை அரசு வெளியிட்ட பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பு!

அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணிச் சலுகை வழங்குவதாக புதுசை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை […]

Continue reading …

கவர்னருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

Comments Off on கவர்னருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

தமிழக ஆளுநர் ரவி, “திராவிட மாடல் ஒன்று இல்லை என்றும் திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது. காலாவதி ஆன கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் என்பது ஒரே நாடு ஒரே பாரதம் என்று கொள்கைக்கு எதிரானது” என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். கவர்னரின் இப்பேட்டிக்கு ஏற்கனவே பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து […]

Continue reading …

விஜயபாஸ்கரின் காளை உயிரிழப்பு!

Comments Off on விஜயபாஸ்கரின் காளை உயிரிழப்பு!

புதுக்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜய் பாஸ்கரின் காளை கலந்து கொண்டது. வாடிவாசலிலிருந்து வெளியான சில நிமிடங்களிலேயே காளை மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த காளையை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு கொம்பன் என்று அழைக்கப்படும் இந்த காளை புதுக்கோட்டை வடசேரி பட்டி நடந்த […]

Continue reading …

ராகுலுக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!

Comments Off on ராகுலுக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!

இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரத் நீதிமன்றத்தில் நடந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்மா என்பவர் தீர்ப்பளித்தார். அவருடைய தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற நீதிபதியாக இருந்த வர்மா, தற்போது ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு […]

Continue reading …

கோவில் நிதி விதி மீறல் குறித்து அண்ணாமலை கருத்து!

Comments Off on கோவில் நிதி விதி மீறல் குறித்து அண்ணாமலை கருத்து!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது விதி மீறல் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும். கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே […]

Continue reading …

மகளிருக்கு இலவசம் பேருந்துகள் நிறுத்தமா?

Comments Off on மகளிருக்கு இலவசம் பேருந்துகள் நிறுத்தமா?

திமுக ஆட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய போது வெளியான முதல் அறிவிப்புகளில் ஒன்றான மகளிருக்கு பேருந்துகளில் இலவசம். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், பேசும்போது “மகளிர் இலவச பேருந்தால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது. இருப்பினும் உங்கள் பகுதிக்கான பேருந்து குறித்த வாய்ப்புகளை கேட்டு விண்ணப்பம் அளித்தால் அந்த பகுதிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு!

Comments Off on செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியிலேயே மால்களில் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரப்பட்டன என்று கூறியுள்ளார். கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதாக வெளிவந்த செய்திக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்பகுதியில் தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது என்று கூறினார். மேலும் சாலை பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போன்ற போல […]

Continue reading …

திடீரென வழுக்கி விழுந்த மேனகா காந்தி!

Comments Off on திடீரென வழுக்கி விழுந்த மேனகா காந்தி!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எம்பி மேனகா காந்தி திடீரென சேற்றில் வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற பகுதிக்கு பாஜக எம்பி மேனகா காந்தி பிரச்சாரம் செய்வதற்கு சென்றார். காரில் இருந்து இறங்கி அவர் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு நடந்து சென்ற போது அப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சேறும் சகதியாக இருந்தது. ஒரு […]

Continue reading …

பிடிஆர் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ கருத்து!

Comments Off on பிடிஆர் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ கருத்து!

தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக தற்போது இருப்பது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான். ஆனால் அதைவிட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ஆடியோ விவகாரம் தான் ஹைலைட் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரையில் கூட்டம் ஒன்றில் பேசியபோது “பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் ஹைலைட். அந்த ஆடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். “தில்லு முல்லு” படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் மீசையோடும் மீசையில்லாத […]

Continue reading …

திடீரென பதவி விலகிய சரத்பவார்!

Comments Off on திடீரென பதவி விலகிய சரத்பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த பல ஆண்டுகளாக இருந்த சரத்பவார் திடீரென தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரத்பவார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சியை தொடங்கியது முதல் சரத்பவார் தலைவர் பதவியிலிருந்து வருகிறார். மகாராஷ்டிராவில் ஒரு வலுவான கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்றும் ஆனால் அரசியலிலிருந்து விலகவில்லை என்றும் […]

Continue reading …