
புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாகுமா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழாவை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கொண்டாடினார். தமிழகம் முழுதும் உள்ள அம்பேத்கார் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருவாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் […]
Continue reading …
கார் விபத்து ஒன்றில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நீரஜா ரெட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவான பாட்டீல் நீரஜா ரெட்டி, ஐதராபாத் நகரிலிருந்து கர்னூலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்து ஓட்டடுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நீரஜா ரெட்டி (52 வயது) […]
Continue reading …
பெரம்பலூர் எம்.எல்.ஏ.பிரபாகரன் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சரையாக்கவேண்டும் என்று பேசியுள்ளார். தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் பேசிய போது, “அமைச்சர் உதயநிதியின் உழைப்பு ஒரு துறையோடு நின்று விடக்கூடாது. முதலமைச்சருக்கு துணை நின்று அனைத்து துறைகளின் பணிகளையும் உதயநிதி மேற்கொள்ள வேண்டும். அமைச்சராக பதவியேற்று பலரும் பாராட்டுத்தக்க வகையில் உதயநிதி செயலாற்றி வருகிறார்” என்று அவர் உதயநிதியை […]
Continue reading …
டிடிவி தினகரன் டுவிட்டரில், “ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும்’’- என்று பதிலளித்துள்ளார். இன்று திமுக சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை என்று தெரிவித்தார். இது, அதிமுகவினர் […]
Continue reading …
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லண்டனில் “எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், அல்லது நானே அரசுடைமையாக்கி தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், ‘லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. முக்கிய பிரமுகர் கட்சியை விட்டு விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் நடப்பு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தனக்கு […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், இன்று அவர் ஆஜராகவுள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள […]
Continue reading …
கே.எஸ்.அழகிரி அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வீட்டு வாடகை உள்பட வீட்டு செலவுக்கு தனது நண்பர்கள் கொடுத்து உதவுகின்றனர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது “50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை எம்எல்ஏ, ஒருமுறை எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் […]
Continue reading …
பாஜக நிர்வாகி செல்வகுமார், செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக நிர்வாகி செல்வகுமார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருக்கும் செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
Continue reading …
இன்று டில்லியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரயிருப்பதையொட்டி, பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் […]
Continue reading …