Home » Archives by category » அரசியல் (Page 124)

அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

Comments Off on அண்ணாமலை பரிந்துரைதான் காரணம்; மத்திய அமைச்சர் தகவல்!

இன்று காலை காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால்தான் இந்த திட்டத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தேன் என கூறியுள்ளார். காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டப்படும் என்பதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]

Continue reading …

எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று!

Comments Off on எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று!

எம்பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதும் 1500 என்ற கணக்கில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது ஐயாயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற […]

Continue reading …

பிரதமர் மோடி சென்னை வருகை!

Comments Off on பிரதமர் மோடி சென்னை வருகை!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள அவர் “தமிழ்நாட்டு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன்’’- என்று பேசியுள்ளார். தமிழகம் வந்த பிரதமர் மோடியை பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை, முதல்வர் முக.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அங்கு, ரூ.1260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிபேட் தளத்தில் […]

Continue reading …

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நடிகை குஷ்பூ திரைப்படங்கள் தயாரிப்பதிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. நடிகை குஷ்பு தனக்கு காய்ச்சல் உடல் வலி சோர்வு ஆகியவை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே காய்ச்சல் அறிகுறி வந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதனை சாதாரணமாக […]

Continue reading …

மருந்துகள் கையிருப்பு பற்றி அமைச்சர் தகவல்!

Comments Off on மருந்துகள் கையிருப்பு பற்றி அமைச்சர் தகவல்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் தனி நபர்கள் தான் கொரொனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், குழுவாக யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரொனா தொற்று குறைந்திருந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரொனா தொற்றுப் பரவி வருகிறது. இதையடுத்து, கொரோனா தொற்றைக் குறைக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் வேண்டி, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நேற்று, தமிழகத்தில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. […]

Continue reading …

நாளை மெரீனா செல்ல மக்களுக்கு தடை?

Comments Off on நாளை மெரீனா செல்ல மக்களுக்கு தடை?

பொதுமக்கள் நாளை சென்னை மெரினாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை பிரதமர் மோடி நாளை தமிழகம் வந்து சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துவிட்டு அவர் முதுமலை செல்லவுள்ளார். நாளை பிரதமர் வருகையையொட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. அவரது நிகழ்ச்சிநிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதற்கு பதிலாக அவர் சென்னை மெரினாவில் […]

Continue reading …

மோடிக்கு கருப்புக்கொடியா?

Comments Off on மோடிக்கு கருப்புக்கொடியா?

காங்கிரஸ் கட்சி நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சென்னை – கோவை வந்தே பாரத் நிகழ்ச்சியை தொடங்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். தமிழக வரும் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் […]

Continue reading …

விசாரணை கைதியின் விவகாரத்தில் புதிய அதிகாரி நியமனம்!

Comments Off on விசாரணை கைதியின் விவகாரத்தில் புதிய அதிகாரி நியமனம்!

தமிழக அரசு அம்பாசமுத்திர நகரில் விசாரணை கைதியின் பல்லை பிடுங்கிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு அமுதா என்ற அதிகாரியை நியமனம் செய்துள்ளது. காவல் நிலையத்திற்கு அடிதடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் காவல்துறையினரால் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல் புடுங்கிய புகார் குறித்து விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா என்பவரை தமிழக அரசு […]

Continue reading …

ஆளுநர் குறித்து ப.சிதம்பரம் சாடல்!

Comments Off on ஆளுநர் குறித்து ப.சிதம்பரம் சாடல்!

ப.சிதம்பரம் பாஜகவால் நியமனம் செய்யப்படும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை மிதிக்கிறார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக அரசுக்கும் தமிழக கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று ஸ்டெர்லைட் மற்றும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பது குறித்து ஆளுநர் பேசியதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர் கூறும் போது, “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான, வித்தியாசமான […]

Continue reading …

கருணாநிதிக்கு நினைவுச் சின்னத்திற்கு ஒப்புதல்!

Comments Off on கருணாநிதிக்கு நினைவுச் சின்னத்திற்கு ஒப்புதல்!

தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை மண்டல ஆணையம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தற்போதைய திமுக அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து பல்வேறு அரசியல் கட்சியை தலைவர்கள் நிர்வாகிகள் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் […]

Continue reading …