Home » Archives by category » அரசியல் (Page 132)

காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கையை தெரிவித்த அமைச்சர்!

Comments Off on காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கையை தெரிவித்த அமைச்சர்!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஹெச்3என்2 காய்ச்சல் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முன்னெச்சரிக்கை குறித்து அறிவித்துள்ளார். ஹெச்3என்2 காய்ச்சல் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திருந்தது. இவ்வகையான வைரஸ் காய்ச்சலுக்கு […]

Continue reading …

திடீரென பல்டியடித்த ஜெயக்குமார்!

Comments Off on திடீரென பல்டியடித்த ஜெயக்குமார்!

பாஜகவுடன் அதிமுக கட்சியின் கூட்டணி தொடர்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் முன்னணி தலைவர்கள் ஒரு பக்கம் பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம், “பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது, கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையுகருத்தும் கூறவில்லை, ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து பாஜக நடவடிக்கை […]

Continue reading …

அன்புமணி ராமதாஸின் டுவிட்டர் கருத்து!

Comments Off on அன்புமணி ராமதாஸின் டுவிட்டர் கருத்து!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வணிகவரித்துறையினருக்கு 23 ஆண்டுகளாக சமூக அநீதி- நடைபெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அவரது பதிவில், “வணிகவரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது. வணிகவரித்துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது இனியும் […]

Continue reading …

ஓபிஎஸ் இல்லத்தில் அண்ணாமலை!

Comments Off on ஓபிஎஸ் இல்லத்தில் அண்ணாமலை!

தமிழகத்தின் பாஜக தலைவரான அண்ணாமலை திடீரென்று ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கட்சியில் பாஜகவில் உள்ள நிர்வாகிகள் திடீரென சேர்ந்து வருகின்றனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்கின்றனர். மேலும் அதிமுகவின் கூட்டணியில் பாஜக இடம்பெறுவது சந்தேகமே என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார். சமீபத்தில் ஓபிஎஸ் தாயார் மறைந்த […]

Continue reading …

மு.க.ஸ்டாலின் – பினரயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சி!

Comments Off on மு.க.ஸ்டாலின் – பினரயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சி!

தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சர் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும்நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1822ம் ஆண்டு திருவதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஒரு சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோல் சீலை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இதற்கு தெரிவித்து நடந்த தோல்சீலை போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றனர். இந்த போராட்டத்தின் வெற்றியை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோல் சீலை போராட்டம் பொதுக்கூட்டம் […]

Continue reading …

நடிகை குஷ்புவின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on நடிகை குஷ்புவின் அதிர்ச்சி தகவல்!

நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு அவரது சிறுவயதில் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 90களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இவர் பிரபல இயக்குனர் சுந்தர்.சி-யின் மனைவியும் ஆவார். அரசியலில் இணைந்த குஷ்பூ இதற்கு முன்னர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். கடந்த சில ஆண்டுகள் முன்னதாக கருத்து வேறுபாட்டால் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்து செயலாற்றி வந்தார். தற்போது […]

Continue reading …

ராஜேந்திர பாலாஜியின் கருத்து!

Comments Off on ராஜேந்திர பாலாஜியின் கருத்து!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆடு, மாடு தவிர அனைத்தையும் கொடுத்தனர் என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவின் வெற்றி குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருது நகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த விழா ஒன்றில் பேசிய போது, “திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் அறிவித்த எந்த திட்டத்தையும் […]

Continue reading …

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் கருத்து!

Comments Off on தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் கருத்து!

சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. தெலுங்கானா சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 14ம் தேதிக்கு பிறகு எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள தெலுங்கானா அரசு “ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமையை செய்யாமல் காலம் தாழ்த்துகிறார். அரசியல் அமைப்பு சட்டம் […]

Continue reading …

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

Comments Off on அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க அரசு திட்டமிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக சாதக பாதகங்களை ஆராய மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசு பேருந்துகள் எதுவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது. சென்னையில் தற்போது ஓடும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவலும் தவறானது, மக்களுக்கு கிடைக்கிற எச்சலுகையும் […]

Continue reading …

பீகார் அரசியல்வாதியின் குற்றச்சாட்டு!

Comments Off on பீகார் அரசியல்வாதியின் குற்றச்சாட்டு!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதி “நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையே காரணம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வதந்தியாக பரவி வருகிறது. இது குறித்து தமிழக மற்றும் பீகார் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பிகார் அரசு அனுப்பிய நான்கு நபர்கள் குழு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் […]

Continue reading …